21/04/2013

உதயம் NH4-திரைவிமர்சனம்



சித்தார்த்(ஹீரோ)
*******************


 

# டூயட் பாடல்,சண்டைக்காட்சிகள்(ஓரளவு சகிக்ககூடிய),காதல் காட்சிகள் (சகிக்கமுடியாத) உடன் புத்திசாலித்தனமான ஒரு ஹீரோவாக படம் முழுக்க வருகிறார்.
# பல பெண்கள் கவர் போட்டோக்களில் மாட்டும் ஒரு அழகான ஹீரோவை ஏன் இப்படி படம் முழுக்க சிரிச்சாப்போச்சு என்பது போல உம் என்றே இயக்குனர் நடிக்கவைத்துள்ளார் என்பது கேள்விக்குறி.
# இந்த படத்தில் தமிழில் பேசும் ஒரே ஒரு நபரும் இவரே.

#ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்துள்ளார் சித்தார்த்.
# இருப்பினும் சித்தார்த்துக்கு இந்த படம் தமிழில் நல்ல ஒரு மீள்வரவு.



கே.கே.மேனன்(வில்லன் மாதிரி)

************************************




# இந்த படத்தில் ரசித்த கரக்டர் இவரோடது தான்.
# சில இடங்களில் பார்வையாலே கலக்குகிறார்.
# இந்த படத்தில் பல சீன்களில் பாராட்டையும் சில சீன்களில்(கிளைமாக்ஸ்)     பரி
தாபத்தையும் ஏற்படுத்துகிறார்
#படம் ஆரம்பித்ததிலிருந்து முடிவுவரை இவரது பாடிலாங்குவேஜ் அருமை. .
# ஹிந்தி சினிமாவில் நானா படேகர்,இர்பான் கான்,மனோஜ் பாஜ்பேய்,நவ்ஷுதின் சித்திக்,வரிசையில் கே.கே மேனனுக்கும் ஒரு இடமுண்டு.
# அவரின் சில ஹிந்தி படங்களோடு ஒப்பிடும் போது இது அவருக்கு ஒரு சாதாரண படமே.




அஷ்ரிதா ஷெட்டி(ஹீரோயின்)  

*********************************

# நாங்க இங்லீஸ் பேசினா எப்டி இருக்குமோ அப்டி இருக்கு இந்த பொண்ணோட தமிழ்.
# நிறைய இடத்தில் ஒரே டயலக்கை பேசி வெடிச்சிரிப்பை ஊட்டியவர் இவர் தான்.
# சில ட்ரெஸ்களில் அழகா தெரிகிறார் அடுத்த ஷாட்லயே சப்பையா காட்சியளிக்கிறார்.
# “இந்த பொண்ணு அட்டு பிகரா குட்டு பிகரா???”
படத்தோட பெரிய சஸ்பென்ஸ்ல இதுவும் ஒன்று.

வேற என்ன?
**************
# சாதாரண கதையாக இருந்தாலும் கொஞ்சம் சுவாரஷ்யமாக சொன்ன இயக்குனர் குழுவினரை பாராட்டியே ஆகவேண்டும்.
# ஒன்றிரண்டு “ட்விஸ்டுகள்” இருப்பதால் படம் தப்பிக்க வாய்ப்புகள் உண்டு.
# இத விட படத்தில் சித்தார்த் நண்பனாக வரும் குண்டுப்பையன், சின்சியர் ஆபீசராக வரும் மனிதர் உண்மையிலேயே கலகலப்பை ஊட்டுகின்றனர்.
# ஜீ.வீ யின் பாடல்கள்  “யாரோ இவன்” அழகான மெலோடி
“ஒரக் கண்ணால” கானா ரகம். ரசிக்கவைக்கின்றன.
# பின்னணி இசையில் மயக்கமென்ன,மதராசபட்டணம் பாடல்களை மீள இசைத்து எரிச்சலூட்டுகிறார்.
# ஒளிப்பதிவாளர் சில சீன்களீல் கலக்கியுள்ளார்.
இதற்கு உதாரணமாக சித்தார்த் ட்ரெய்னில் தப்பி போகும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி என்பனவற்றை கூறலாம்.
# படத்தில் சில சீன்கள் ரசிக்கவைத்தாலும் இடையிடையே வரும் பாடல்கள்,சகிக்க முடியாத காதல்காட்சிகள் படத்துக்கு வேக தடைகள்.
# படத்தில் கதாநாயகி உட்பட மூன்று கரக்டர்கள் கே.கே.மேனனுக்கு தாங்க ஏதோ இயக்குனராயும் கே.கே மேனன் ஏதோ தயாரிப்பாளர் போலயும் எண்ணி
இது தான் நடந்துச்சு என்றுஃபீல் பண்ணி கதை சொல்கிறார்கள் .
அதிலும் முதலில் கதை சொல்லும் பணக்கார பையன் “காக்கா எண்ட வடையை தூக்கிடிச்சு டீச்சர்” பாணியில் சொல்கிறார்.
அங்கேயும் நிச்சயம் வயிறுகுலுங்க சிரிக்கலாம்.
# இப்டி ஆங்காங்கே ஒட்டைகளும் ரசிக்கக்கூடிய விசயங்களும் படத்ல இருக்கு.

# மொத்தத்தில் வெற்றிமாறன் கதை,வசனத்தில் என்பதோடு புத்திசாலித்தனமாக நிறுத்தி தன் உதவி இயக்குனர் மணிமாறனை இயக்குனராக களமிறக்கி ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்.

10/01/2013

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்-ஆறிலிருந்து ஆஸ்கார் வரை -பாகம்-2

இந்த தொடரின் முதல் பகுதியை வாசிக்க............


 ................."சிறுவன் திலிப்புக்கு  இலத்திரனியல் சாதனம் என்றால் கொள்ளை பிரியம்.15 வயதை அடைந்ததும் குடும்பப்பொறுப்புகள் காரணமாக தனது படிப்பை சரியாக தொடரமுடியவில்லை.சிறு சிறு வேலைகள் செய்தான்.தான் முதன் முதாலாக பெற்ற சம்பளம் 50 ரூபா என்றும் அது ஒரு ரெக்கோர்ட் பிளேயர் பழுதுபார்த்தற்கு கிடைத்தகாக ஒரு பேட்டியில் சொல்கிறார் ரஹ்மான். இலத்திரனியல் சாதனங்கள் மீதான உந்துதலே ரஹ்மானின் பாடல்கள் அதி உன்னத ஒலிநயத்துடன் வெளிவர வித்திட்டன. பதினெட்டு வயதாகியதும் அதிகாலையில் வீட்டைவிட்டு புறப்பட்டு ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றில் பணியாற்றி பின் மாலையில் இசைநிகழ்ச்சி பங்குபற்றிவருவான் திலீப். இடைநேரத்தில் பள்ளிப்படிப்பும் அரைகுறையாக சென்றது.இருப்பினும் திலீப்பின் வருமானம் அவர்களின் குடும்பத்தை கொண்டுசெலுத்த போதியதாயிருந்தது.

மனம் தளரவில்லை இசை தான் வாழ்க்கை என்று சிறு வயதிலே முடிவு செய்தமையால் படிப்பு பற்றி கவலைப்படவில்லை.மிகப்பெரிய உச்சத்தை அடையவேண்டும் என்றால் சில சிலவற்றை இழக்கவேண்டிவரும் அது ரஹ்மானின் வாழ்க்கையிலும் நடந்தது.ஆனாலும் பிற்காலத்தில் பள்ளிப்படிப்பை பூர்த்தி செய்யாவிடினும் இசைமூலமாக மியாமி பல்கலைகழகத்தால் டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவிக்கப்பட்டார்.


வாய்ப்புகளை தேடி அலைந்தார்.அதன் விளைவாக இசைஞானி, எம்.எஸ்.வீ மற்றும் தெலுங்கு இசையமைப்பாளர் கோட்டி,ரமேஷ் நாயுடு ஆகியோரிடம் இசை உதவியாளராக பணியாற்றினார்.இதுவே பின்னர் படவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க முதலாக இருந்தது.மேலும் எம்.எஸ்.வீயே தனக்கு மிக பிடித்த இசையமைப்பாளர் என்றும் ரஹ்மான் கூறுகிறார்.சங்கமம் படத்தில் ”மழைத்துளி மழைத்துளி” பாடலையும்,கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ”விடைகொடு எங்கள் நாடே” பாடலையும் பாடவைத்தார்.



அதன் பின்னர்  ட்ரினிட்டி பல்கலைக்கழக இசைசம்பந்தமான உயர் படிப்பை கற்றார். பிரபல தபேலா இசைக்கலைஞர் ஷாகிர் ஹிஸைன்,குன்னக்குடி வைத்தியநாதன், சிவமணி ஆகியோருடன் இணைந்து மேடை நிகழ்ச்சிகள் வழங்கினார். ரஹ்மான் பிரதான கீ.போர்ட் கலைஞராகவும் ட்ரம்ஸ் வாத்தியகலைஞர் சிவமணி,ஜோன் ஆண்டனி,ரஹ்மானின் இசையில் பேட்டை ராப்,சிக்குபுக்கு ரயிலே உள்ளிட்ட பல பாடல்கள் பாடிய சுரேஷ்பீட்டர்,ஜோஜோ,ராஜா போன்ற நண்பர்களுடன் ROOTS என்னும் இசை குழுவொன்றை சில காலம் நடத்திவந்தார்.

இதற்கிடையில்திலீப்குமாரும் அவரது குடும்பத்தினரும் சொந்த விருப்பின் பேரில் 1989 ஆம் ஆண்டு இஸ்லாமிய மத்தை தழுவிகொண்டார்.இது தங்கள் உடனடி முடிவாக இருக்கவில்லையெனவும் 10 வருசமாக இதை பற்றி ஆலோசித்தே இஸ்லாம் மார்க்கத்தை தழுவியதாகவும் பின்னொருநாள் பேட்டியொன்றில் ரஹ்மான் கூறியுள்ளார். அத்தோடு மட்டுமில்லாது தீன் இசைமாலை என்னும் இஸ்லாமிய கீதங்கள் அடங்கிய இறுவெட்டு ஒன்றை திலீப்குமார் என்றபேரில் வெளியிட்டார்.

இப்பாடல்களை மனோ, சுஜாதா மற்றும் ரஹ்மானின் இனிய தோழர் ஷாகுல் ஹமீத் ஆகியோர் பாடினர்.ஷாகுல் ஹமீத் பின்னாளில் ரஹ்மானின் இசையில் ராசாத்தி என் உசிரு, செந்தமிழ்நாட்டு தமிழச்சியே,ஊர்வசி ஊர்வசி போன்ற் ஹிட் பாடல்களை பாடினார்.பின்னர் ஷாகுல் ஹ்மீத்தின் அகால மரணம் ரஹ்மானை பெரும் வேதனைக்குள்ளாக்கியது.இன்றும் ஷாகுல் ஹமீத்தின் குடும்பத்துனருக்கு உறுதுணையாக ரஹ்மான் உள்ளார்.அதன் பின் இஸ்லாமிய சம்பிரதாயங்களுக்கு ஏற்ப திலீப்குமார் தனது பெயரை அல்லா ரக்கா ரஹ்மான் என்று மாற்றி கொண்டார்.

 தீன் இசைமாலையில் ஹாகுல் ஹமீத் பாடிய இஸ்லாமிய பாடல் இது.



ட்ரினிட்டி பல்கைலைகழக மேற்படிப்பை முடித்துக்கொண்ட ரஹ்மான் தனது வீட்டிலே ஒரு ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றை அமைத்து விளம்பரப்படங்களுக்கும், ஜிங்கில்ஸ் எனப்படும் குறு இசைகளையும் வழங்கிய வண்ணம் இருந்தார். ரஹ்மான் இந்திய இசையை தாண்டி சர்வதேச இசையை ரசிக்க தொடங்கினார்.
அதில் காணப்படும் நுட்பங்களை ஆராய்ந்தார்.பிரபல மேற்கத்திய கீபோர்ட் சரித்திரம் ஜானியே ரஹ்மானின் மானசீக குரு ஆவார்.அவரை போலவே தலைமுடி வளர்த்து அவரின் ஸ்டைலிலே பின்னாளில் மேடைநிகழ்ச்சிகளில் தோன்றினார்.

 
Yanni-Raimaker stage performace

மேலும் வெங்காலிஸ்,எனிக்மா,ஹான்ஸ் ஸிம்மர் போன்றோர் ரஹ்மானுக்கு மிகவும் பிடித்த மேற்கத்திய இசை கலைஞர்கள் ஆவர்.ரஹ்மானின் இசையில் மேற்கூறிய சரித்திரங்களின் அகத்தூண்டுதல் காணப்படும்.இவ்வாறு மிக புதிய பாதையில் தனது பயணத்தை முன்னோக்கி தொடர்ந்தவண்ணம் இருந்தார்.சரியான வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.இவ்வாறு தனது இசைபயணத்தின் ஆரம்பதளங்களை சரியாக உருவாக்கொண்டிருந்த சமயம் 1991 ஆம் ஆண்டின் தமிழில் சிறந்தவிளம்பர ஜிங்கிள்’க்கான விருதை லியோ கொஃபி விளம்பரத்துக்காக ரஹ்மானின் பெயர் அறிவிக்கப்பட்டது.அந்த விளம்பரபடத்தை இயக்கியிருந்தவர் ரஹ்மானின் நண்பரும் பின்னாளில்  மின்சாரகனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற அழகான படங்களை இயக்கியவரும் சிறந்தஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் ஆவார்.
                                                            Leo coffee ad-Rahman

ராஜீவ் மேனனின் அழைப்பின் பேரில் அவ்விருதுவழங்கும் விழாவுக்கு மணிரத்னம் வந்திருந்தார் அவ்விருதை ரஹ்மானுக்கு மணிரத்னமே வழங்கி கெளரவித்தார்..இதுவே பின்னாளில் இந்திய சினிமாவையையே புரட்டிப்போட்ட ஒரு கூட்டணி அமையகாரணமான ரஹ்மான்&மணிரத்னம் இடையிலான முதல் சந்திப்பு ஆகும்.அந்த விழா முடிந்த பிற்பாடு அந்த 25 வயது இளைஞனை மணிரத்னத்தின் உறவுக்காரப்பெண் ஷாரதா த்ரிலோக் மணிரத்னத்திடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் சிறுகாலம் ஷாரதா த்ரிலோக் இன் த்ரிஷ் ப்ரோடக்சன்ஸில் பணியாற்றினார் ரஹ்மான்.
அந்த சமயம் இயக்குனர் மணிரத்னம் இயக்குனர் பாலச்சந்தரின் “கவிதாலயா” நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்துக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார்.மணிரத்னம்,பாலச்சந்தர் ஆகியோர் இதற்கு முன்னய படங்களுக்கு இசைஞானியையே பயன்படுத்தி பெருவெற்றி கண்டிருந்தனர். இருப்பினும் இசைஞானி இளையராஜாக்கும் மணிரத்னத்திற்கும் இடையே தளபதி படத்தின் பின்னர் பெரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தனர்.
இதேபோல புதுப்புது அர்த்தங்கள் படத்தின் பின்னர் பாலச்சந்தருக்கும் இசைஞானிக்கும் இடையே கருத்துவேறுபாடு முற்றி இருந்தது.
இதன் காரணமாக ரோஜா படத்துக்கு புதிய திறமையான ஒரு இசையமைப்பாளரை இசையமைக்கவைக்க திட்டமிருந்தார் மணிரத்னம்.

 மிகுதி அடுத்த பதிவில்.........

29/12/2012

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்-ஆறிலிருந்து ஆஸ்கார் வரை-பாகம் 1

 (இலங்கை தமிழ் பிரதேசம் முழுதும் பிரதி ஞாயிறுகளில் வெளிவரும் தமிழ்த்தந்தி பத்திரிகைக்காக எழுதிவரும் "யார் ரஹ்மான்?" என்ற தொடரின் மாற்றம் பெற்ற வடிவமே இத்தொடர். இதன் மூன்று  பாகங்கள் இதுவரை தமிழ் தந்தி பத்திரிகையில் வெளிவந்துள்ளன.இச்சிந்தனையை தூண்டி வாய்ப்பளித்த  சுகந்தன் அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.)


Add caption

சரித்திரங்கள் தானாக பிறப்பதில்லை அவை உருவாக்கப்படுகின்றன. ஒரே பாதையில் செல்லும் உலகை மாற்றி புதுமை படைப்பவனே சரித்திர நாயகனாக வரலாற்றில் இடம்பெறுகிறான்.அந்த வகையில் சிறந்த இசை மற்றும் பாடலுக்கான உலகின் தலைசிறந்த விருதான இரண்டு ஆஸ்கார்கள்,இரண்டு கிராம்மி விருதுகள்,தலா ஒவ்வொரு கோல்டன் க்லோப்,பஃப்டா விருதுகள் போன்ற உலக விருதுகளோடு இந்திய அரசின் நான்கு தேசியவிருதுகள்,தென்னிந்திய வட இந்திய சிறந்த இசைக்கான 28 பில்ம்ஃபேர் விருதுகள் உட்பட இசைக்கான 103 விருதுகள்,டைம் சஞ்சிகையின் அங்கீகாரம்,நோபல் மேடையில் இசைநிகழ்ச்சி,மியாமி பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் இன்னும் எண்ணிலடங்கா சாதனைகள்  ஒரு இசைத்தமிழன் இவர். தாஜ்மகால் எப்படி இந்தியாவின் உலக அதிசயமோ அதே போல இவர் இந்தியாவின் இசை அதிசயம். இசைப்புயல்,ஆஸ்கார் நாயகன் என உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்தியாவின் அடையாளம் ஏ,ஆர்.ரஹ்மானின் ஆரம்ப வாழ்க்கை பயணம் பற்றிய தேடலின் விழைச்சலே இந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்-ஆறிலிருந்து ஆஸ்கார் வரை.





சரித்திரத்தில் இடம்பிடித்த ஒவ்வொரு மனிதனும் வெளியுலகிற்கு  முதன்முதலில் தெரியவரும் போது அக்கணத்தில் கேட்கப்பட்ட கேள்வி ”யார் இவன்”?.இதே போல இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படத்தின் பாடல்கள் வெளிவந்து தேசியவிருது பெற்று இந்திய திரை இசையையே புரட்டிப்போட்ட போது இந்தியா திரையுலகே பிரமிப்போடு கேட்ட கேள்வி யார் இந்த ரஹ்மான்? 2009 ஆம் ஆண்டு ஆஸ்கார் மேடையில் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று ஒரு மனிதன் சொல்லி இரண்டு விருதுகளை வாங்கிய போது இந்த உலகமே கேட்ட கேள்வி யார் இந்த ரஹ்மான்?இந்த இசைப்பிரவாகத்தின் ஆரம்பகாலம் எப்படியிருந்தது? என்னென்ன சவால்களை எதிர்கொண்டார்? எதையெதை இழந்தார்? இவ்வுச்சத்தை தொட என்னென்ன உந்துதலாக இருந்தது இசைப்புயலின் வாழ்க்கை கடிகாரத்தை கொஞ்சம் முன்னோகி திருப்பி பார்ப்போம்.




சேகர்,கஸ்தூரி(இப்போது கரிமா) தம்பதியினருக்கு 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி  பிறந்தார்.ரஹ்மானுக்கு மூன்று சகோதரிகள். பிரபல பாடகி மற்றும் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷின் தாயர் ரெஹ்ஹானா ரஹ்மானின் சொந்த தமக்கையாராவார்.ரஹ்மான் என்று பிற்காலத்தில் அறியப்பட்ட இச்சிறுவனின் இயற்பெயர் திலீப்குமார்.திலீப்பின்(ரஹ்மான்) தந்தை ஆர்.கே சேகர் ஒரு பிரபல மலையாள இசையமைப்பாளர்.





இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர்.1964ஆம் ஆண்டு பழசிராஜா என்னும் மலையாள படம் மூலம் திரையிசைக்கு அறிமுகமானார் சேகர்(பின்னர் இப்படம் அண்மையில் மெருகேற்றப்பட்டு மம்முட்டியின் நடிப்பில் வெளிவந்து இசைஞானி இளையராஜாக்கு தேசியவிருது பெற்றுகொடுத்து).இப்படத்தில் மொத்தமாக 12 பாடல்கள் இடம்பெற்று இருந்தன. அக்காலத்தில் ஜேசுதாஸ் பாடிய ”சொட்ட முதல் சுடல வாறே” என்ற பாடல் மிக பிரபலம்.

இந்த பாடலை கேட்டுபாருங்கள் மொழி புரியாவிடினும்  எவ்வளவு உணர்வுபூர்வமானதயிருக்கும்.



 




ரஹ்மானின் தந்தையாரே சிறந்த குருவாக இருந்து இசை கற்றுக்கொடுத்தார். சேகர் ஹார்மோனியம் வாசிப்பதில் வல்லவர். எனவே மகனுக்கு இசைநுணுக்கங்களை திறம்பட கற்றுக்கொடுத்தார்.திலீப் சிறுவனாக இருக்கும் போதே ஹார்மோனியக் கட்டைகளை துணியால் மூடிவிட்டு வாசித்து கலக்கினான். இந்த ஹார்மோனிய
மே பின்னாளில் ஒரு கீபோர்ட் சக்கரவர்த்தியையே உருவாக்கிற்று.




திலீப் குமார் தன் தந்தை மீது பேரன்பு கொண்டிருந்தார்.இருப்பினும் அவனின் வாழ்க்கையில் முதல் அடி விழுந்தது.திலீப்புக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது தந்தை சேகர் 43 வயதில் திடீர்மரணம் எய்தினார்.தாய் மற்றும் சகோதரிகள் செய்வதறியாது தவித்தனர். இருப்பினும் திலீப்புக்கு இசையில் புதிதாகசாதனை படைக்கவேண்டும் என்ற தீராநோய் பற்றிக்கொண்டது. தந்தை இட்ட அடித்தளத்தை மேலும் பலப்படுத்த அடுத்த கட்டத்தை நோக்கி மனம் தளராமல் புறப்பட்டான்.அவனுக்கு தாயார் கஸ்தூரி(கரிமா) மிக உந்துதலாக இருந்தார்.”தந்தையின் இழப்பு பெரும் சோகத்தை தரினும் காலப்போக்கில் தன் தாயார் அல்லுபகலும் பாடுபட்டு தந்தை இல்லை என்ற உணர்வே இல்லாமல் தங்களை வளர்த்ததாக ரஹ்மான் அடிக்கடி சிலாகித்துகொள்வார்.பின்னாளில் வரலாறு படத்தில் ”தீயில்விழுந்ததேனா” பாடலை தனது தாய்க்கு சமர்ப்பித்து உருகி பாடியிருப்பார்.


ரஹ்மான் இன்றும் தன் தந்தையை மானசிகமாக நேசித்து வருகிறார். தனது வீட்டைவிட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு வேளையும் தந்தையின் படத்தை தரிசித்துசெல்வார்.

அடுத்த பாகத்தில் சந்திப்போம்...
இவன் இரோஷன் 

18/12/2012

இலங்கை இசைக்கலைஞர்களின் ORIENTAL MUSIC ORCHESTRA -2012



SRILANKA'S NATIONAL ORIENTAL  MUSIC ORCHESTRA என்ற இந்நிகழ்ச்சி COLOMBO ROYAL NORWEGIN EMBASSY  ஏற்பாட்டில்  இந்தவருடம் மார்ச்  6 ஆம் திகதி  கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த தமிழ்,சிங்கள மொழிகளை சேர்ந்த சிறந்த  நூறு இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து இந்நிகழ்ச்சி அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.



இந்நிகழ்வை நேரில் பார்க்கமுடியவில்லை எனினும்  இந்நிகழ்வில் வயலின் இசைத்த யாழ் பல்கலைக்கழக நண்பி மூலம் சில மாதங்களிற்கு முன்னர் பார்க்க நேரிட்டது. மிகவும் அற்புதமான இசை ஒருங்கமைப்புடன் பாரம்பரிய இசை கருவிகளின் சங்கமத்தில் இவ் ஓர்கெஸ்ட்ரா ஒழுங்கமைக் கப்பட்டிருந்தது.  இலங்கையில் அதிகமான இசை இசை நிகழ்ச்சியை கண்டுகளித்திருப்பினும் இவ் ஓர்கெஸ்ட்ராவில் இசைக்கப்பட்ட அனைத்து இசை கோர்வைகளும் என்னை கட்டிப்போட்டுவிட்டன.அதன் பின்னர் இதை பற்றி பகிரலாம் என்ற எண்ணம் தோன்றியது.அது பற்றிய ஒரு தேடலில் கிடைத்தவையே இந்த பதிவு




இந்நிகழ்ச்சி இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களின் இசையை பிரதிபலிப்பதான ஒரு கலவையாக இருந்தது.இந்நிகழ்ச்சிக்கான வழிநடத்தலை INSTITUTE OF HUMAN EXCELLENCE AND ARU SRI ART THEATRE மேற்கொண்டிருந்தது.இந்நிகழ்ச்சிக்கான பிரதான ஆலோசகராக திருமதி கலாசூரி அருந்ததி சிறீரங்கனாதன் செயற்பட்டார். ஈழத்தின் புகழ்பெற்ற கலாவித்தகர் இவர். இவர்களின் முற்றுமுழுதான சுயவிபரம் சாதனைகள் விருதுகள் பற்றி இத்தளத்தில் அறியலாம்....

திருமதி அருந்ததி சிறீரங்கநாதன்
http://184.154.234.7/~arunthat/profile.html

தென்னிந்திய நடிகர் வினித்தால் கௌரவிக்கப்பட்டபோது
இந்நிகழ்ச்சிக்கான பயிற்சி ஆறு மாத காலங்களாக நடைபெற்று இறுதியில் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது. இலங்கையின் முன்னணி இசை 
கலைஞர்களான திருமதி அருந்ததி சிறீ ரங்கனாதன்,டாக்டர் நிர்மலாகுமாரி ரொட்ரிகோ,குமாரலியனவத்தே,சோமசிறி இலசிங்க, எஸ்.மகேந்திரன்விஜேரத்ன ரணதுங்க,டாக்டர் பாலாம்பிகை ராஜேஸ்வரன் போன்றவர்கள் இந்நிகழ்ச்சிக்கான பயிற்சியை வழங்கினர்.


இவ் ஓர்கெஸ்ட்ரா  முக்கியமாக தென்னிந்திய கர்நாடக இசையை பிரதிபலிக்கும் முகமாகவும் இசைக்கருவிகள் நரம்புவாத்தியங்களே அதிகம் இசைக்கப்பட்டன. மேலும் தமிழரின் பாரம்பரிய தனித்துவ வாத்தியங்களான தவில்,நாதஸ்வரம்,மிருதங்கம் உட்பட சித்தார், சாரங்கி, சரோட், எஸ்ராஜ்தில்ரூபா போன்ற ஹிந்துஸ்தானி இசைகருவிகள்,உருமி,தப்பு,பறை,மோர்சிங்,கஞ்சிரா,கடம்,சுத்தமத்தளம், 
கோட்டுவாத்தியம்,முரசு,கொம்பு,புல்லாங்குழல்,மோகன்வீணா,வயலீன்  
ஹார்மோனியம்தபேலா,சாந்தூர், போன்ற பல்வேறுபட்ட இசைகலாச்சாரங்களின் கோர்வையில் இந்நிகழ்ச்சி அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இவ் ஓர்கெஸ்ட்ராவில் முதலாவதாக ஹம்சத்வனி ராகம்,ஆதி தாளத்தில் முத்துஸ்வாமி தீட்சிதர் அமைத்த வதாபி கீர்த்தனம் இசைக்கப்பட்டதுஇதற்கான நெறியாள்கையை கலாசூரி அருந்ததி சிறீரங்கனாதன் மேற்கொண்டிருந்தார்.இக்காணொளிகளை இங்கு பார்க்கலாம்.



இதற்கடுத்தபடியாக பாஷந் பைரவி ராகம்,த்ரீ தாளத்தில் ஹிந்துஸ்தானி இசை சங்கீத் விசாரட் சோமசிறீ இளசிங்க அவர்களின் நெறியாள்கையின் கீழ் இசைக்கப்பட்டது.



அடுத்தபடியாக  நியான் ஹி மால்கர் மற்றும் ராக பஹார் ராகத்தை தழுவி டாக்டர் நிர்மலா குமாரி அவர்களின் இசைநெறிபடுத்தலில் மேலும் ஒரு  ஹிந்துஸ்தானி  இசைகோர்வை வாசிக்கப்பட்டது.



அதன் பின்னர் குமார லியனவத்த அவர்களின் நெறியாள்கையில் சிங்கள கிராமிய இசை கருவிகளான கட்டா பெரா,பஹாதரட்ட பெரா,சப்ரகமூவ பெரா போன்றவற்றுடன் கர்நாடக இசைகருவிகளின் கலவையில் சிங்கள கிராமிய இசை வாசிக்கப்பட்டது.மிகவும் வித்யாசமான ஒரு அனுபவமாக இது இருந்தது.



 மேலும் இறுதியாக  இந்திய ராகங்களின் கோர்வையான  கர்நாடக ராகமாலிகை ஒன்றை கர்நாடக்கிராமிய இசையுடன் கலாசூரி அருந்ததி சிறீரங்கநாதன் அவர்கள்   நெறியாள்கை செய்திருந்தார்.



நிகழ்ச்சியின் இறுதியில் பங்களாதேஷ்,பலஸ்தீன்,நோர்வே இசை கலைஞர்களின் இசைநிகழ்வும் நடைபெற்றது.இறுதியாக இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்திமுடிக்க காரணமாகவிருந்த அனைத்து கலைஞர்களும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இப்படிப்பட்ட பல்வேறு சமுகத்தை ஒன்றிணைக்கும் இசைநிகழ்சிகள் மிகவும் வரவேற்கத்தகது.இந்நிகழ்ச்சியை சிறப்புறநடாத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 இந்நிகழ்ச்சி பற்றிய தகவல் தந்து உதவிய நண்பிக்கு என் நன்றிகள்.


-இவன் இரோஷன்-


16/12/2012

ரஹ்மானின் மீள்வருகை-கடல் பாடல்கள்



ஆரம்பகாலத்தில் ஒரு திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இசைவெளியீட்டு விழா என்று நடத்தி வெளியிடுவார்கள்.ஆனால் அண்மைக்காலத்தில் சிங்கிள் ட்ராக்ஸாக  வெளியிட்டு ஆல்பத்துக்கான எதிர்பார்ப்பை கூட்டி முற்றுமுழுதான பாடல்களை வெளியிடுவது என்று ஒரு சம்பிரதாயம் தமிழ் சினிமா இசையில் தோன்றியுள்ளது.அதை மிக அழகாகவும் வெற்றிகரமாகவும் ரஹ்மான்&மணிரத்னம் கூட்டணியினர் செய்து காட்டி வெற்றியும் பெற்றுள்ளனர்.இது ஒரு திரைப்படத்துக்கான ஒரு மறைமுக விளம்பரமாக இருப்பினும் இசைரசிகர்களுக்கு இவை கொண்டாட்டம் என்றே சொல்லாம். நெஞ்சுக்குள்ளே பாடல் ஆரம்பத்தில் வந்தது பின்னர் ஏலே கீச்சான் இப்போது பாடல்கள் அனைத்தும் வெளிவந்துவிட்டன.ஆனால் ஒவ்வொரு பாடல் வரும் போதும் கடல் திரைப்படம் மீதான எதிர்பார்ப்ப்பு உச்சத்துக்கு சென்றுவிட்டது.  மணிரத்னம் கடல் படத்துக்கான விளம்பரத்தை ஆஸ்கார் நாயகன் மூலம் அழகாக ஆரம்பித்துள்ளார்.ஒட்டு மொத்தமாக 7 பாடல்கள்வைரமுத்து,கார்க்கி தலா 3 பாடல்களும் ஈழத்தை சேர்ந்த தினேஷ் தனது ராப் பாடலையும் எழுதியுள்ளனர்.இந்த ஆல்பத்தில் ரஹ்மான் அனேகமாக புதிய பாடகர்களையே பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்.ஹரிணீ,விஜய் ஜேசுதாஸ்,சின்மயி,ஹரிசரண் போன்றோரை தவிர மற்றய பாடகர்கள் அனைவரும் அனேகருக்கு பரிச்சயமில்லாத ரஹ்மானின் கண்ணில் தட்டுப்பட்ட திறமைசாலிகள்.ஏற்கனவே கடல் பாடல்கள் பற்றிய எதிர்வுகூறல்களை இசைப்புயலின் நெஞ்சுக்குள்ள-MTV UNPLUGGED-கடல் பாடல்கள்.......     பதிவில் பகிர்ந்திருந்தேன்.
னது பார்வையில் கடல் பாடல்கள் எப்படி இருக்கிறது மற்றும் புதிய பாடகர்கள் யார் யார் என்பது பற்றிய ஒரு பதிவே இது....


கடல் பாடல் இசை 




 சித்திரை நிலா

பாடியவர்-விஜய் ஜேசுதாஸ்


பாடல் வரிகள்-வைரமுத்து

விஜய் ஜேசுதாஸின் இசைபயணத்துக்கு ஒரு மகுடமான பாடல் எனலாம்.விஜய் ஜேசுதாஸ் ஏற்கனவே சிவாஜி  படத்தில் ரஹ்மான் இசையில் சஹானா பாடல் பாடியிருந்தாலும் படத்தில் விஜய் ஜேசுதாஸ்குரலில் இடம்பெறாததால் மிகவும் வருத்தமடைந்திருந்தார்.அதன் பின்னர் இந்த வாய்ப்பு விஜய் ஜேசுதாஸுக்கு நிச்சயம் திருப்தியளிக்ககூடியதாயிருக்கும். ரஹ்மான் இவ்வளவுநாளா ஏன் இப்பிடி பாட்டு கொடுக்கல்ல என்று கேட்க தோன்றும்  தாலாட்டும் பாடல்.ரஹ்மானின் தொண்ணூறு காலப்பகுதியில் வந்த மென்மையான பாடல்களில் உள்ள உயிர் இப்பாடலில் உள்ளது.இந்த ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்த உருக்கமான பாடல்.வைரமுத்துவின் நம்பிக்கை ஊட்டும் வரிகள் அழகு.பாடலின் பின்னணியி வரும் வயலீன்,புல்லாங்குழல் மயக்கும்.மரமொன்று விழுந்தால் என்று வரும் கோரஸ் நிச்சயம் உணர்ர்சியை தூண்டும்.



. *****************************************************************************
மூங்கில் தோட்டம்

பாடியவர்கள்-அப்ஹே,ஹரினி

பாடல் வரிகள்-வைரமுத்து

அப்ஹே&நீதி மோகன்
புதியவர் அப்ஹே&ஹரினி குரலில்  இன்னுமொரு அழகான மெலோடி பாடல் அப்ஹே ஏற்கனவே ரஹ்மான் இசையில் கன்னட கோட்ஃபாதர் படத்தில் பாடலை பாடியுள்ளார்.


மேலும் கொஞ்சம் காஃபி கொஞ்சம் காதல் படத்தில்உயிர் உயிர் தோழாபாடலை சக்திசிறீகோபாலனுடன் பாடியுள்ளார்பாடலின் பின்னணியில் வரும் கிட்டார் ஸ்ரிங்ஸ் பியானோ, வயலீன் மென்மையாக தாலாட்டிசெல்லும்.ஹரிணி நீண்டகாலத்துக்கு பின்னர் ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.கொளத்தாங்கரையில குளிக்கும் பறவைகள் என்று தன்னோட ப்ரஷான குரலில் ஆரம்பிக்கும் போதும்இது போதும் எனக்கு இது போதுமேன்று உருகும் போது பாடலை உச்சத்துக்கு கொண்டுசொல்கிறார். பாடல் வரிகள் சொல்லவே தேவையில்லை வைரமுத்து அழகான காதல் பாடலை இயற்கையுடன் சொல்லியுள்ளார்.இந்த பாடலை கேட்கும் போது ரஹ்மானை பார்த்துஇது போதும் எனக்கு இது போதுமேஎன்று சொல்லத்தோன்றும் அவ்வளவு அழகான மெலோடி.இப்படிப்பட்ட பாடல்களுக்காக எவ்வளவு நாள் காத்திருந்தோம்.