10/01/2013

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்-ஆறிலிருந்து ஆஸ்கார் வரை -பாகம்-2

இந்த தொடரின் முதல் பகுதியை வாசிக்க............


 ................."சிறுவன் திலிப்புக்கு  இலத்திரனியல் சாதனம் என்றால் கொள்ளை பிரியம்.15 வயதை அடைந்ததும் குடும்பப்பொறுப்புகள் காரணமாக தனது படிப்பை சரியாக தொடரமுடியவில்லை.சிறு சிறு வேலைகள் செய்தான்.தான் முதன் முதாலாக பெற்ற சம்பளம் 50 ரூபா என்றும் அது ஒரு ரெக்கோர்ட் பிளேயர் பழுதுபார்த்தற்கு கிடைத்தகாக ஒரு பேட்டியில் சொல்கிறார் ரஹ்மான். இலத்திரனியல் சாதனங்கள் மீதான உந்துதலே ரஹ்மானின் பாடல்கள் அதி உன்னத ஒலிநயத்துடன் வெளிவர வித்திட்டன. பதினெட்டு வயதாகியதும் அதிகாலையில் வீட்டைவிட்டு புறப்பட்டு ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றில் பணியாற்றி பின் மாலையில் இசைநிகழ்ச்சி பங்குபற்றிவருவான் திலீப். இடைநேரத்தில் பள்ளிப்படிப்பும் அரைகுறையாக சென்றது.இருப்பினும் திலீப்பின் வருமானம் அவர்களின் குடும்பத்தை கொண்டுசெலுத்த போதியதாயிருந்தது.

மனம் தளரவில்லை இசை தான் வாழ்க்கை என்று சிறு வயதிலே முடிவு செய்தமையால் படிப்பு பற்றி கவலைப்படவில்லை.மிகப்பெரிய உச்சத்தை அடையவேண்டும் என்றால் சில சிலவற்றை இழக்கவேண்டிவரும் அது ரஹ்மானின் வாழ்க்கையிலும் நடந்தது.ஆனாலும் பிற்காலத்தில் பள்ளிப்படிப்பை பூர்த்தி செய்யாவிடினும் இசைமூலமாக மியாமி பல்கலைகழகத்தால் டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவிக்கப்பட்டார்.


வாய்ப்புகளை தேடி அலைந்தார்.அதன் விளைவாக இசைஞானி, எம்.எஸ்.வீ மற்றும் தெலுங்கு இசையமைப்பாளர் கோட்டி,ரமேஷ் நாயுடு ஆகியோரிடம் இசை உதவியாளராக பணியாற்றினார்.இதுவே பின்னர் படவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க முதலாக இருந்தது.மேலும் எம்.எஸ்.வீயே தனக்கு மிக பிடித்த இசையமைப்பாளர் என்றும் ரஹ்மான் கூறுகிறார்.சங்கமம் படத்தில் ”மழைத்துளி மழைத்துளி” பாடலையும்,கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ”விடைகொடு எங்கள் நாடே” பாடலையும் பாடவைத்தார்.



அதன் பின்னர்  ட்ரினிட்டி பல்கலைக்கழக இசைசம்பந்தமான உயர் படிப்பை கற்றார். பிரபல தபேலா இசைக்கலைஞர் ஷாகிர் ஹிஸைன்,குன்னக்குடி வைத்தியநாதன், சிவமணி ஆகியோருடன் இணைந்து மேடை நிகழ்ச்சிகள் வழங்கினார். ரஹ்மான் பிரதான கீ.போர்ட் கலைஞராகவும் ட்ரம்ஸ் வாத்தியகலைஞர் சிவமணி,ஜோன் ஆண்டனி,ரஹ்மானின் இசையில் பேட்டை ராப்,சிக்குபுக்கு ரயிலே உள்ளிட்ட பல பாடல்கள் பாடிய சுரேஷ்பீட்டர்,ஜோஜோ,ராஜா போன்ற நண்பர்களுடன் ROOTS என்னும் இசை குழுவொன்றை சில காலம் நடத்திவந்தார்.

இதற்கிடையில்திலீப்குமாரும் அவரது குடும்பத்தினரும் சொந்த விருப்பின் பேரில் 1989 ஆம் ஆண்டு இஸ்லாமிய மத்தை தழுவிகொண்டார்.இது தங்கள் உடனடி முடிவாக இருக்கவில்லையெனவும் 10 வருசமாக இதை பற்றி ஆலோசித்தே இஸ்லாம் மார்க்கத்தை தழுவியதாகவும் பின்னொருநாள் பேட்டியொன்றில் ரஹ்மான் கூறியுள்ளார். அத்தோடு மட்டுமில்லாது தீன் இசைமாலை என்னும் இஸ்லாமிய கீதங்கள் அடங்கிய இறுவெட்டு ஒன்றை திலீப்குமார் என்றபேரில் வெளியிட்டார்.

இப்பாடல்களை மனோ, சுஜாதா மற்றும் ரஹ்மானின் இனிய தோழர் ஷாகுல் ஹமீத் ஆகியோர் பாடினர்.ஷாகுல் ஹமீத் பின்னாளில் ரஹ்மானின் இசையில் ராசாத்தி என் உசிரு, செந்தமிழ்நாட்டு தமிழச்சியே,ஊர்வசி ஊர்வசி போன்ற் ஹிட் பாடல்களை பாடினார்.பின்னர் ஷாகுல் ஹ்மீத்தின் அகால மரணம் ரஹ்மானை பெரும் வேதனைக்குள்ளாக்கியது.இன்றும் ஷாகுல் ஹமீத்தின் குடும்பத்துனருக்கு உறுதுணையாக ரஹ்மான் உள்ளார்.அதன் பின் இஸ்லாமிய சம்பிரதாயங்களுக்கு ஏற்ப திலீப்குமார் தனது பெயரை அல்லா ரக்கா ரஹ்மான் என்று மாற்றி கொண்டார்.

 தீன் இசைமாலையில் ஹாகுல் ஹமீத் பாடிய இஸ்லாமிய பாடல் இது.



ட்ரினிட்டி பல்கைலைகழக மேற்படிப்பை முடித்துக்கொண்ட ரஹ்மான் தனது வீட்டிலே ஒரு ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றை அமைத்து விளம்பரப்படங்களுக்கும், ஜிங்கில்ஸ் எனப்படும் குறு இசைகளையும் வழங்கிய வண்ணம் இருந்தார். ரஹ்மான் இந்திய இசையை தாண்டி சர்வதேச இசையை ரசிக்க தொடங்கினார்.
அதில் காணப்படும் நுட்பங்களை ஆராய்ந்தார்.பிரபல மேற்கத்திய கீபோர்ட் சரித்திரம் ஜானியே ரஹ்மானின் மானசீக குரு ஆவார்.அவரை போலவே தலைமுடி வளர்த்து அவரின் ஸ்டைலிலே பின்னாளில் மேடைநிகழ்ச்சிகளில் தோன்றினார்.

 
Yanni-Raimaker stage performace

மேலும் வெங்காலிஸ்,எனிக்மா,ஹான்ஸ் ஸிம்மர் போன்றோர் ரஹ்மானுக்கு மிகவும் பிடித்த மேற்கத்திய இசை கலைஞர்கள் ஆவர்.ரஹ்மானின் இசையில் மேற்கூறிய சரித்திரங்களின் அகத்தூண்டுதல் காணப்படும்.இவ்வாறு மிக புதிய பாதையில் தனது பயணத்தை முன்னோக்கி தொடர்ந்தவண்ணம் இருந்தார்.சரியான வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.இவ்வாறு தனது இசைபயணத்தின் ஆரம்பதளங்களை சரியாக உருவாக்கொண்டிருந்த சமயம் 1991 ஆம் ஆண்டின் தமிழில் சிறந்தவிளம்பர ஜிங்கிள்’க்கான விருதை லியோ கொஃபி விளம்பரத்துக்காக ரஹ்மானின் பெயர் அறிவிக்கப்பட்டது.அந்த விளம்பரபடத்தை இயக்கியிருந்தவர் ரஹ்மானின் நண்பரும் பின்னாளில்  மின்சாரகனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற அழகான படங்களை இயக்கியவரும் சிறந்தஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் ஆவார்.
                                                            Leo coffee ad-Rahman

ராஜீவ் மேனனின் அழைப்பின் பேரில் அவ்விருதுவழங்கும் விழாவுக்கு மணிரத்னம் வந்திருந்தார் அவ்விருதை ரஹ்மானுக்கு மணிரத்னமே வழங்கி கெளரவித்தார்..இதுவே பின்னாளில் இந்திய சினிமாவையையே புரட்டிப்போட்ட ஒரு கூட்டணி அமையகாரணமான ரஹ்மான்&மணிரத்னம் இடையிலான முதல் சந்திப்பு ஆகும்.அந்த விழா முடிந்த பிற்பாடு அந்த 25 வயது இளைஞனை மணிரத்னத்தின் உறவுக்காரப்பெண் ஷாரதா த்ரிலோக் மணிரத்னத்திடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் சிறுகாலம் ஷாரதா த்ரிலோக் இன் த்ரிஷ் ப்ரோடக்சன்ஸில் பணியாற்றினார் ரஹ்மான்.
அந்த சமயம் இயக்குனர் மணிரத்னம் இயக்குனர் பாலச்சந்தரின் “கவிதாலயா” நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்துக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார்.மணிரத்னம்,பாலச்சந்தர் ஆகியோர் இதற்கு முன்னய படங்களுக்கு இசைஞானியையே பயன்படுத்தி பெருவெற்றி கண்டிருந்தனர். இருப்பினும் இசைஞானி இளையராஜாக்கும் மணிரத்னத்திற்கும் இடையே தளபதி படத்தின் பின்னர் பெரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தனர்.
இதேபோல புதுப்புது அர்த்தங்கள் படத்தின் பின்னர் பாலச்சந்தருக்கும் இசைஞானிக்கும் இடையே கருத்துவேறுபாடு முற்றி இருந்தது.
இதன் காரணமாக ரோஜா படத்துக்கு புதிய திறமையான ஒரு இசையமைப்பாளரை இசையமைக்கவைக்க திட்டமிருந்தார் மணிரத்னம்.

 மிகுதி அடுத்த பதிவில்.........