15/08/2013

மூன்று மொழி-மூன்று இசை

இசைக்கு மொழியில்லை,நிறமில்லை,மதமில்லை,ஜாதியில்லை.அதுபோல் அதை உணரும் நல்ல ரசிகனும் வேறுபாடுகளை களைந்தவனாகிறான். நல்ல இசைக்கு மொழி தேவையில்லை.இரண்டு செவிகள் போதும். நமக்கு பிடித்த,ரசித்த விசயங்களை அதை ரசிக்கும் நல்ல மனிதர்களுக்கு பகிரும் போது உண்டாகும் பூரிப்பு சொல்லில் அடங்காது. அதே போல நமக்கு பிடித்த நல்ல இசையை பகிர்தலும் இன்பம் தான்.அந்தவகையில் இன்றிலிருந்து வாரம் ஒரு முறை “மூன்று மொழி மூன்று இசை” எனும் தலைப்பில் நான் ரசித்த தமிழ், வேற்றுமொழிப்பாடல்கள் பற்றிப்பகிரலாமென இருக்கிறேன். இந்த பகுதியில் 2 வேற்று மொழிப்பாடல்களும் ஒரு வெளிவராத அல்லது அதிகம் பிரபலமாகாத மிகவும் ரசித்த தமிழ் பாடல் ஒன்றும் அடங்கியிருக்கும். முதலில் தமிழ்பாடல் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்.



”இஞ்சாதே இஞ்சாதே”-நெடுஞ்சாலை(2013)

பாடியவர்கள்-மதுசிறீ,ரூப்குமார் ரத்தோட்,யாஷின்

பாடல் வரிகள்-மணி அமுதன்.


நான் அறிந்தவரையில் இதுவரைக்கும் ரூப்குமார் ரத்தோட் 3 தமிழ் பாடல்கள் பாடியுள்ளார். அவை மூன்றும் மிக பெரிய ஹிட் மெலோடிகள்.
1.வெண்மதி வெண்மதியே நில்லு
2.ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
3.பூக்கள் பூக்கும் தருணம் அந்த வரிசையில் இந்தப்பாடலும் நிச்சயம் இணைந்துகொள்ளும்.
எங்கேயும் எப்போதும்” ,”பொன்மாலைப்பொழுது” என்று தொடர்ச்சியான ஹிட் ஆல்பங்களை கொடுத்த சத்யாவின் அருமையான இசையில் வெளிவந்திருக்கிறதுரூப்குமாரின் குரலின் வீச்சம்,அதன் குழைவுகள்கேட்டவுடனேயே மயக்கும் தன்மை என்பன இவரின் பாடல்களில் அதிகமாக இருக்கும்.
மதுசிறீயின் குழந்தை தனமான கொஞ்சும் குரல்,யாஷினின் மலையாள வார்த்தை கோலங்கள் என்று மயக்குகிறது. ரூப்குமாரின் குரல் வரும் இடங்கள் அற்புதம். புதிய பாடலாசிரியர் மணி அமுதனின் வரிகளும் அருமை.


ANURAGA VILOCHANANAAYI”-NEELATHTHAAMARA(2009)-MALAYALAM

இசை-வித்யாசாகர்

பாடியவர்கள்-ஸ்ரேயா கோஷல்&ஸ்ரீகுமார்.


யூ ரியூப்பில் உலாவிக்கொண்டிருந்த சமயம் எதேச்சையாக தட்டுப்பட்ட பாடலிது.அதன் பிறகு இந்த பாடலோட மொத்த டீரெய்லும் கலக்ட் பண்ணியாச்சு.முதலில் இந்த மலையாளம் என்ற மொழியை கண்டுபிடிச்சவனுக்கு ஒரு சல்யூட்.மலையாளத்துக்கு “மெலோடியஸ் லாங்க்வேஜ்” அப்டின்னு ஒரு பேர நான் வெச்சுக்கிறன்.எவ்ளோ குழைவான மொழி.
இந்த பாடல் ஒன்றே அதற்கு சாட்சி சொல்லும்.2009 இல் வெளிவந்து கேரளா எங்கும் ஒலித்த பாடலிது.தமிழ் ரசிகர்களுக்கு இடையிடையே நல்ல தமிழ் மெலோடிகளை கொடுத்து விட்டு தலைமறைவாகும் மெலோடி கிங் வித்யாசாகர் தான் இசை.இதே படத்தில் பல்ராம் மற்றும் விஜய்பிரகாஷ் இணைந்து பாடிய PAKALONNU பாடலும் அருமை.
இந்த படத்தை இயக்கியவர் லால் ஜோஸ். இவரின் அனேக படங்களுக்கு வித்யாசாகர் சிறந்த இசை கொடுத்திருப்பார். இந்த படத்துக்கு சிறந்த இசைக்கான பிலிம்பேர் விருதை வித்யாசாகர் பெற்றுக்கொண்டதும் சிறப்பு. அண்மையில் வெளிவந்த “டயமண்ட் நெக்லஸ்” படத்தில் இடம்பெற்ற 
NILA MALARE-NIVAS பாடலும் இவர்களின் கூட்டணியில் வெளிவந்த ஒரு அழகான பாடல்.


O RANGREZZ”-BHAAG MILKA BHAAG(2013)-HINDI

இசை-ஷங்கர்,எஷான்,லாய்

பாடியவர்கள்-ஸ்ரேயா கோஷல்,ஜாவிட் பாஷிர்


ங்தே பசந்தி” படத்தின் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ராவின் இந்திய தடகள வீரர் மில்க்கா சிங்கின் வாழ்க்கை பற்றிய படம் தான்  
“BHAAG MILKA BHAAG”.இந்த பாடல் நம்ம சங்கர் மகாதேவன்,எஷான்,லாய் கூட்டணியில் செம்மையாக வந்திருக்கிறது.ஸ்ரேயா கோஷல் வழமை போல பின்னியிருக்கிறார்.பாடல் முழுதும் அசல் க்ளாசிக்கல் டச். 
நம்ம மசக்களி சோனம் கபூர்,பர்ஹான் அக்தர் தோன்றும் இந்தப்பாடலின் விஷுவல்ஸும் அப்டி இருக்கும் அண்மையில் வெளிவந்த ஹிந்தி பாடல்களில் மிகவும் பிடித்து போன பாடல்களில் இதுவுமொன்று. வழமையாக ராகேஷின் முன்னய படங்களுக்கு(ரங் தே பசந்தி,டெல்லி-6) தல ரஹ்மான் பிரம்மாண்டமான இசை கொடுத்திருப்பார்.இரண்டு படங்களுக்கும் ரஹ்மானுக்கு பிலிம்பேர் கிடைத்திருந்தது.ஆனால் இந்த படத்துக்கு ஷங்கர் எஷான் லாயை தெரிவு செய்திருந்தார். பாலிவூட்டில் பாடல்கள் சூப்பர் ஹிட். இவரோட அடுத்த படத்துக்கும் இவர்கள் தான் இசையமைக்கிறார்கள்.இதே படத்தில் இடம்பெற்ற ZINDA-BAAG MILKA BHAAG பாடலும் என்னோட பேவரீட்.




ணைந்திருப்போம் நல்ல இசையுடன் மீண்டும் சந்திப்போம்.
-ரோஷன் புவிராஜ்.









11/08/2013

இரண்டாம் உலகம்-ஹாரீஸின் இசை


காதல் கொண்டேன்,7ஜி ரெயின்போ காலனி,புதுப்பேட்டை என்று யுவனின் அட்டகாசமான இசையுடன் கைகோர்த்த செல்வராகவன், யுவனுடனான பிரிவுக்கு பின்னர் ஆயிரத்தில் ஒருவன்,மயக்கமென்ன படங்களில் ஜீ.வீ.பிரகாஷை தெரிவுசெய்திருந்தார்.இருப்பினும் செல்வாவும் யுவனும் மீண்டும் இணையும் வாய்ப்புகள் இருப்பதாகவும் இரண்டாம் உலகம் படத்துக்கு யுவன் இசையமைக்க இருப்பதாயும் சில தகவல்கள் இணையவுலகில் வலம்வந்திருந்தது. ஆனால் வைரமுத்து-ஹாரீஸ் கூட்டணியிலே இரண்டாம் உலகம் படம் ஆரம்பிக்கப்பட்டது. 

இரண்டாம் உலகம் பாடல்கள் வெளிவந்த பின்னர் ஹாரீஸ் “கிங் ஒஃப் ரொமான்ஸ்” என்று அழைக்கப்படுவார் என்று செல்வா சொன்னது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் துப்பாக்கி படத்துக்கு பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரீஸ் இசையமைத்திருக்கும் படம் என்பாதால் என்னவோ ஒரிஜினல் மெலோடிகள் கொடுப்பதற்கு கொஞ்சம் மெனக்கட்டிருக்கிறார் மனிதர். ஹாரீஸுக்காக நீண்டகாலத்துபின்னர் மொத்த பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.




னி மொழியே”
பாடியவர்-கார்த்திக்.

கொஞ்சம் வில்லங்கமான பெயருள்ள பாடல் தான். கலைஞர் மேலுள்ள மரியாதையில் வைரமுத்து இப்படி பல்லவியை ஆரம்பித்து இருப்பாரோ என்னவோ.இப்டி சிந்திக்க வைத்தாலும் பாடல் கேட்டபின் ஒரு அணுவும் அசையாது என்பது போல் ஹாரீஸும் கார்த்துக்கும் நம்மை கட்டி போட்டுவிடுகிறார்கள். இந்த ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்தபாடல் இது.ஹாரீஸ் இசையில் கார்த்திக் பாடிய அவள் உலக அழகியே,ஒரு ஊரில் அழகே உருவாய்,விழி மூடி ஜோசித்தால்,ஹசிலி பிசிலி வரிசையில் இன்னொரு ஹிட் பாடல்.வழமையான ஹாரீஸ் கிட்டார் பின்னணிகள்,இடையிடையே புட்டிங்கில் பிளம்ஸ் போல பெண்குரல் கோரஸ்,தெளிவான நீரோடை போல குரல்,வரிகளை கொல்லாத இசை என்று இப்பாடலை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

-முத்தமா கேட்கிறேன் முறுவல் தான் கேட்கிறேன்.
-வலதுகால் எட்டுவை வாழ்க்கையை தொட்டுவை.

இரண்டு சரணங்களிலும் வரும் இந்த இரண்டு வரிகளையும் கார்த்திக் பாடும் இடம் அருமை.” வழமை போல வைரமுத்து கிளாஸ்.


ன்னவனே மன்னவனே”
பாடிவர்கள்-கோபால் ராவ்,ஷக்தி சிறீ கோபாலன்

பாடல் கிட்டாருடன் ஆரம்பிக்கும் போது வழமையான ஹாரீஸ் பாடல் என்று தோன்றவைத்தாலும் “மன்னவனே மன்னவனே” என்று வரிகளில் சப்ரைஸ் காத்திருக்க பாடல் கொஞ்சம் கிராமிய மெட்டோடு மேற்கத்திய இசையோடு பயணிக்க ஆரம்பிக்கும். நெஞ்சுக்குள்ளே,எங்க போனா ராசா என்று ரஹ்மானிடம் பாடிக்கொண்டிருந்த ஷக்திசிறீ கோபாலன் இப்பாடலுக்கு சரியான தெரிவு. இரண்டு இடைஇசைகளும் ஃப்லூட், பியானோ,வயலீன் இசைகளுடன் அழகாக கோர்க்கப்பட்டு இருக்கிறது. பாடலின் இடையே லைட்டா ஹாரீஸ் பாடல் ஒன்றின் தேஜா வூ பீலிங் வருவது எனக்கு மட்டுமா தெரியல. இந்த ஆல்பத்திலுள்ள இன்னுமொரு ஹிட் மெலோடி பாடல்.




ன் காதல் தீ”
பாடியவர்-எஸ்.பீ.பாலசுப்ரமணியம்.

இரண்டாம் உலகம் பாடல்களில் ஒரு மாஸ்டர் பீஸ் மெலோடி என்று சொல்லலாம். எஸ்.பீ,பீ இன் கம்பீரமான காதல் கொஞ்சும் குரல் அதற்கு மேல் கவிப்பேரரசின் வரிகள் கிளாசிக்கல் வாத்தியங்களின் பின்னணி இசை, பெண்குரல்களின் கோரஸ் என்றும் ஹாரீஸ் ஸ்டைலில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு மயக்குகிறது. முக்கியமாக இரண்டு இடையிசைகளும் அபாரம்.
இந்த பாடலில் வரும் சில வரிகள்.

”உடல்கள் இரண்டும் சேரும் முன் உள்ளம் இரண்டும் சேருமே
உடலின் வழியே உயிரை தொடுவது காதலே”
“இதயம் இரண்டும் தூரம் தான் இதழ்கள் நான்கும் அருகில் தான்
இதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே”

பாடும் நிலா பாடிய மலரே மெளனமா,காதல் ரோஜாவே வரிசையில் இந்த பாடலும் நிச்சயம் இடம்பெறும். பாடும் நிலாவை வைத்து இந்த ஜெனெரேஷன் இசை ரசிகர்களுக்கு ஒரு அழகான மெலோடியை கொடுத்த ஹாரீஸுக்கு நன்றிகள்.


விண்ணைத்தாண்டி அன்பே”
பாடியவர்-விஜய் பிரகாஷ்

வழமையான அக்மார்க் ஹாரீஸ் பாடல். கொஞ்சம் வேகமான எலக்ரானிக் இசையுடன் வானில் பயணிப்பது போல ஒரு உணர்வு. பாடலை கேட்கும் போது நிச்சயம் ஹாரீஸ் இசையில் விஜய் பிரகாஷ் பாடிய முன்னைய பாடல்கள் நினைவுக்கு வரும்.
“திசு அழிந்தாலும் தசை எரிந்தாலும் ஆன்மா அழியுமா”
கொஞ்சம் விஞ்ஞானமா வைரமுத்து கேள்விகேட்கிறார்.




ராக்கோழி ராக்கோழி”

பாடிவர்கள்-ஹரிஹரன்,சிறீராம்

இந்த பாடலிலும் ஒப்பனிங்குக்கும் பாடலுக்கும் இடையே பெரிய ஒரு இடைவேளை. வீரபாண்டிக்கோட்டையிலே பாடல் ஸ்டைலில் ஒரு பாடல்.இந்த பாடாலுக்கு அவ்வளவு மெனக்கட்டு இருக்கமாட்டார் ஹாரீஸ்.கொஞ்சம் ஆக்ரோஷமாக ஹரிஹரன் ஆரம்பிக்க சிறீராம் அதை பிக் ஆப் பண்ண பாடல் தொடரும் இரண்டு சரணங்களிலும் ஹரிகரனும்,சிறீராமும் பகிர்ந்து பாடியுள்ளனர். இரண்டு சரணங்களும் முடியும் இடங்களில் ஃபீல்  அருமை.


னங்கள்ளு விஷமுள்ள”
பாடியவர்-தனுஷ்

”வை திஸ் கொலவெறி”ன்னு எப்ப பாடினாரோ அன்னைக்கு ஆரம்பிச்ச கிக்ஸ்ரார்ட் இன்னும் ஓடிட்டு இருக்கு என்றால் தனுஷ் ஒரு அதிஷ்டசாலி என்று சொல்லமுடியாது. தனக்கேற்ற இலகுவான பாடல்களை தெரிவு செய்து ஒரு பாடகராக தன்னை நிருபித்து வருகிறார் சூப் பாய் தனுஷ். தனுஷும் ஹாரீஸும் இதுவரை எந்த படத்திலும் பணியாற்றவில்லை.இருந்தாலும் இந்த பாடல் மூலம் அந்த குறையை நிவர்த்திசெய்த்துள்ளனர்.வழமையாக தனுஷ் காதல் தோல்வி பையன்களுக்காக பாடுவார் இந்த பாடல் கல்யாணம் பண்ணி அவஸ்தைபடும் கணவர்களுக்கானதாக இருக்கும் என்று செல்வா கூறியிருந்தார். மொத்தத்தில் அஞ்சல,வேணாம் மச்சான் வேணாம் வரிசையில் ஹாரீஸ் ஸ்டைல் தனுஷ் பாடலிது.




ஹாரிஸ் மெலோடிகளில் சிரத்தையை காட்டியுள்ளார். சில பாடல்களில் எங்கேயே கேட்ட மயக்கம் என்ற வார்த்தையை தவிர்க்கமுடியவில்லை. இவற்றை திருத்திக்கொண்டால் ஹாரீஸ் ஹாலிவூட் பக்கம் ஒரு வலம் வரலாம். அப்புறம் அதையே தமிழ்ல போடலாம்.ஒட்டுமொத்தமா பார்த்தால் ஆல்பம் இரண்டாம் உலகம் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கசெய்துள்ளது. நிச்சயம் ஒரு ஹிட் ஆல்பமாக கொள்ளப்படும். 

செல்வா-ஹாரீஸ் கூட்டணி இன்னுமொரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கு.

-ரோஷன் புவிராஜ்-