21/04/2013

உதயம் NH4-திரைவிமர்சனம்



சித்தார்த்(ஹீரோ)
*******************


 

# டூயட் பாடல்,சண்டைக்காட்சிகள்(ஓரளவு சகிக்ககூடிய),காதல் காட்சிகள் (சகிக்கமுடியாத) உடன் புத்திசாலித்தனமான ஒரு ஹீரோவாக படம் முழுக்க வருகிறார்.
# பல பெண்கள் கவர் போட்டோக்களில் மாட்டும் ஒரு அழகான ஹீரோவை ஏன் இப்படி படம் முழுக்க சிரிச்சாப்போச்சு என்பது போல உம் என்றே இயக்குனர் நடிக்கவைத்துள்ளார் என்பது கேள்விக்குறி.
# இந்த படத்தில் தமிழில் பேசும் ஒரே ஒரு நபரும் இவரே.

#ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்துள்ளார் சித்தார்த்.
# இருப்பினும் சித்தார்த்துக்கு இந்த படம் தமிழில் நல்ல ஒரு மீள்வரவு.



கே.கே.மேனன்(வில்லன் மாதிரி)

************************************




# இந்த படத்தில் ரசித்த கரக்டர் இவரோடது தான்.
# சில இடங்களில் பார்வையாலே கலக்குகிறார்.
# இந்த படத்தில் பல சீன்களில் பாராட்டையும் சில சீன்களில்(கிளைமாக்ஸ்)     பரி
தாபத்தையும் ஏற்படுத்துகிறார்
#படம் ஆரம்பித்ததிலிருந்து முடிவுவரை இவரது பாடிலாங்குவேஜ் அருமை. .
# ஹிந்தி சினிமாவில் நானா படேகர்,இர்பான் கான்,மனோஜ் பாஜ்பேய்,நவ்ஷுதின் சித்திக்,வரிசையில் கே.கே மேனனுக்கும் ஒரு இடமுண்டு.
# அவரின் சில ஹிந்தி படங்களோடு ஒப்பிடும் போது இது அவருக்கு ஒரு சாதாரண படமே.




அஷ்ரிதா ஷெட்டி(ஹீரோயின்)  

*********************************

# நாங்க இங்லீஸ் பேசினா எப்டி இருக்குமோ அப்டி இருக்கு இந்த பொண்ணோட தமிழ்.
# நிறைய இடத்தில் ஒரே டயலக்கை பேசி வெடிச்சிரிப்பை ஊட்டியவர் இவர் தான்.
# சில ட்ரெஸ்களில் அழகா தெரிகிறார் அடுத்த ஷாட்லயே சப்பையா காட்சியளிக்கிறார்.
# “இந்த பொண்ணு அட்டு பிகரா குட்டு பிகரா???”
படத்தோட பெரிய சஸ்பென்ஸ்ல இதுவும் ஒன்று.

வேற என்ன?
**************
# சாதாரண கதையாக இருந்தாலும் கொஞ்சம் சுவாரஷ்யமாக சொன்ன இயக்குனர் குழுவினரை பாராட்டியே ஆகவேண்டும்.
# ஒன்றிரண்டு “ட்விஸ்டுகள்” இருப்பதால் படம் தப்பிக்க வாய்ப்புகள் உண்டு.
# இத விட படத்தில் சித்தார்த் நண்பனாக வரும் குண்டுப்பையன், சின்சியர் ஆபீசராக வரும் மனிதர் உண்மையிலேயே கலகலப்பை ஊட்டுகின்றனர்.
# ஜீ.வீ யின் பாடல்கள்  “யாரோ இவன்” அழகான மெலோடி
“ஒரக் கண்ணால” கானா ரகம். ரசிக்கவைக்கின்றன.
# பின்னணி இசையில் மயக்கமென்ன,மதராசபட்டணம் பாடல்களை மீள இசைத்து எரிச்சலூட்டுகிறார்.
# ஒளிப்பதிவாளர் சில சீன்களீல் கலக்கியுள்ளார்.
இதற்கு உதாரணமாக சித்தார்த் ட்ரெய்னில் தப்பி போகும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி என்பனவற்றை கூறலாம்.
# படத்தில் சில சீன்கள் ரசிக்கவைத்தாலும் இடையிடையே வரும் பாடல்கள்,சகிக்க முடியாத காதல்காட்சிகள் படத்துக்கு வேக தடைகள்.
# படத்தில் கதாநாயகி உட்பட மூன்று கரக்டர்கள் கே.கே.மேனனுக்கு தாங்க ஏதோ இயக்குனராயும் கே.கே மேனன் ஏதோ தயாரிப்பாளர் போலயும் எண்ணி
இது தான் நடந்துச்சு என்றுஃபீல் பண்ணி கதை சொல்கிறார்கள் .
அதிலும் முதலில் கதை சொல்லும் பணக்கார பையன் “காக்கா எண்ட வடையை தூக்கிடிச்சு டீச்சர்” பாணியில் சொல்கிறார்.
அங்கேயும் நிச்சயம் வயிறுகுலுங்க சிரிக்கலாம்.
# இப்டி ஆங்காங்கே ஒட்டைகளும் ரசிக்கக்கூடிய விசயங்களும் படத்ல இருக்கு.

# மொத்தத்தில் வெற்றிமாறன் கதை,வசனத்தில் என்பதோடு புத்திசாலித்தனமாக நிறுத்தி தன் உதவி இயக்குனர் மணிமாறனை இயக்குனராக களமிறக்கி ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்.