Showing posts with label ஹாரீஸ் ஜெயராஜ். Show all posts
Showing posts with label ஹாரீஸ் ஜெயராஜ். Show all posts

11/08/2013

இரண்டாம் உலகம்-ஹாரீஸின் இசை


காதல் கொண்டேன்,7ஜி ரெயின்போ காலனி,புதுப்பேட்டை என்று யுவனின் அட்டகாசமான இசையுடன் கைகோர்த்த செல்வராகவன், யுவனுடனான பிரிவுக்கு பின்னர் ஆயிரத்தில் ஒருவன்,மயக்கமென்ன படங்களில் ஜீ.வீ.பிரகாஷை தெரிவுசெய்திருந்தார்.இருப்பினும் செல்வாவும் யுவனும் மீண்டும் இணையும் வாய்ப்புகள் இருப்பதாகவும் இரண்டாம் உலகம் படத்துக்கு யுவன் இசையமைக்க இருப்பதாயும் சில தகவல்கள் இணையவுலகில் வலம்வந்திருந்தது. ஆனால் வைரமுத்து-ஹாரீஸ் கூட்டணியிலே இரண்டாம் உலகம் படம் ஆரம்பிக்கப்பட்டது. 

இரண்டாம் உலகம் பாடல்கள் வெளிவந்த பின்னர் ஹாரீஸ் “கிங் ஒஃப் ரொமான்ஸ்” என்று அழைக்கப்படுவார் என்று செல்வா சொன்னது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் துப்பாக்கி படத்துக்கு பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரீஸ் இசையமைத்திருக்கும் படம் என்பாதால் என்னவோ ஒரிஜினல் மெலோடிகள் கொடுப்பதற்கு கொஞ்சம் மெனக்கட்டிருக்கிறார் மனிதர். ஹாரீஸுக்காக நீண்டகாலத்துபின்னர் மொத்த பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.




னி மொழியே”
பாடியவர்-கார்த்திக்.

கொஞ்சம் வில்லங்கமான பெயருள்ள பாடல் தான். கலைஞர் மேலுள்ள மரியாதையில் வைரமுத்து இப்படி பல்லவியை ஆரம்பித்து இருப்பாரோ என்னவோ.இப்டி சிந்திக்க வைத்தாலும் பாடல் கேட்டபின் ஒரு அணுவும் அசையாது என்பது போல் ஹாரீஸும் கார்த்துக்கும் நம்மை கட்டி போட்டுவிடுகிறார்கள். இந்த ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்தபாடல் இது.ஹாரீஸ் இசையில் கார்த்திக் பாடிய அவள் உலக அழகியே,ஒரு ஊரில் அழகே உருவாய்,விழி மூடி ஜோசித்தால்,ஹசிலி பிசிலி வரிசையில் இன்னொரு ஹிட் பாடல்.வழமையான ஹாரீஸ் கிட்டார் பின்னணிகள்,இடையிடையே புட்டிங்கில் பிளம்ஸ் போல பெண்குரல் கோரஸ்,தெளிவான நீரோடை போல குரல்,வரிகளை கொல்லாத இசை என்று இப்பாடலை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

-முத்தமா கேட்கிறேன் முறுவல் தான் கேட்கிறேன்.
-வலதுகால் எட்டுவை வாழ்க்கையை தொட்டுவை.

இரண்டு சரணங்களிலும் வரும் இந்த இரண்டு வரிகளையும் கார்த்திக் பாடும் இடம் அருமை.” வழமை போல வைரமுத்து கிளாஸ்.


ன்னவனே மன்னவனே”
பாடிவர்கள்-கோபால் ராவ்,ஷக்தி சிறீ கோபாலன்

பாடல் கிட்டாருடன் ஆரம்பிக்கும் போது வழமையான ஹாரீஸ் பாடல் என்று தோன்றவைத்தாலும் “மன்னவனே மன்னவனே” என்று வரிகளில் சப்ரைஸ் காத்திருக்க பாடல் கொஞ்சம் கிராமிய மெட்டோடு மேற்கத்திய இசையோடு பயணிக்க ஆரம்பிக்கும். நெஞ்சுக்குள்ளே,எங்க போனா ராசா என்று ரஹ்மானிடம் பாடிக்கொண்டிருந்த ஷக்திசிறீ கோபாலன் இப்பாடலுக்கு சரியான தெரிவு. இரண்டு இடைஇசைகளும் ஃப்லூட், பியானோ,வயலீன் இசைகளுடன் அழகாக கோர்க்கப்பட்டு இருக்கிறது. பாடலின் இடையே லைட்டா ஹாரீஸ் பாடல் ஒன்றின் தேஜா வூ பீலிங் வருவது எனக்கு மட்டுமா தெரியல. இந்த ஆல்பத்திலுள்ள இன்னுமொரு ஹிட் மெலோடி பாடல்.




ன் காதல் தீ”
பாடியவர்-எஸ்.பீ.பாலசுப்ரமணியம்.

இரண்டாம் உலகம் பாடல்களில் ஒரு மாஸ்டர் பீஸ் மெலோடி என்று சொல்லலாம். எஸ்.பீ,பீ இன் கம்பீரமான காதல் கொஞ்சும் குரல் அதற்கு மேல் கவிப்பேரரசின் வரிகள் கிளாசிக்கல் வாத்தியங்களின் பின்னணி இசை, பெண்குரல்களின் கோரஸ் என்றும் ஹாரீஸ் ஸ்டைலில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு மயக்குகிறது. முக்கியமாக இரண்டு இடையிசைகளும் அபாரம்.
இந்த பாடலில் வரும் சில வரிகள்.

”உடல்கள் இரண்டும் சேரும் முன் உள்ளம் இரண்டும் சேருமே
உடலின் வழியே உயிரை தொடுவது காதலே”
“இதயம் இரண்டும் தூரம் தான் இதழ்கள் நான்கும் அருகில் தான்
இதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே”

பாடும் நிலா பாடிய மலரே மெளனமா,காதல் ரோஜாவே வரிசையில் இந்த பாடலும் நிச்சயம் இடம்பெறும். பாடும் நிலாவை வைத்து இந்த ஜெனெரேஷன் இசை ரசிகர்களுக்கு ஒரு அழகான மெலோடியை கொடுத்த ஹாரீஸுக்கு நன்றிகள்.


விண்ணைத்தாண்டி அன்பே”
பாடியவர்-விஜய் பிரகாஷ்

வழமையான அக்மார்க் ஹாரீஸ் பாடல். கொஞ்சம் வேகமான எலக்ரானிக் இசையுடன் வானில் பயணிப்பது போல ஒரு உணர்வு. பாடலை கேட்கும் போது நிச்சயம் ஹாரீஸ் இசையில் விஜய் பிரகாஷ் பாடிய முன்னைய பாடல்கள் நினைவுக்கு வரும்.
“திசு அழிந்தாலும் தசை எரிந்தாலும் ஆன்மா அழியுமா”
கொஞ்சம் விஞ்ஞானமா வைரமுத்து கேள்விகேட்கிறார்.




ராக்கோழி ராக்கோழி”

பாடிவர்கள்-ஹரிஹரன்,சிறீராம்

இந்த பாடலிலும் ஒப்பனிங்குக்கும் பாடலுக்கும் இடையே பெரிய ஒரு இடைவேளை. வீரபாண்டிக்கோட்டையிலே பாடல் ஸ்டைலில் ஒரு பாடல்.இந்த பாடாலுக்கு அவ்வளவு மெனக்கட்டு இருக்கமாட்டார் ஹாரீஸ்.கொஞ்சம் ஆக்ரோஷமாக ஹரிஹரன் ஆரம்பிக்க சிறீராம் அதை பிக் ஆப் பண்ண பாடல் தொடரும் இரண்டு சரணங்களிலும் ஹரிகரனும்,சிறீராமும் பகிர்ந்து பாடியுள்ளனர். இரண்டு சரணங்களும் முடியும் இடங்களில் ஃபீல்  அருமை.


னங்கள்ளு விஷமுள்ள”
பாடியவர்-தனுஷ்

”வை திஸ் கொலவெறி”ன்னு எப்ப பாடினாரோ அன்னைக்கு ஆரம்பிச்ச கிக்ஸ்ரார்ட் இன்னும் ஓடிட்டு இருக்கு என்றால் தனுஷ் ஒரு அதிஷ்டசாலி என்று சொல்லமுடியாது. தனக்கேற்ற இலகுவான பாடல்களை தெரிவு செய்து ஒரு பாடகராக தன்னை நிருபித்து வருகிறார் சூப் பாய் தனுஷ். தனுஷும் ஹாரீஸும் இதுவரை எந்த படத்திலும் பணியாற்றவில்லை.இருந்தாலும் இந்த பாடல் மூலம் அந்த குறையை நிவர்த்திசெய்த்துள்ளனர்.வழமையாக தனுஷ் காதல் தோல்வி பையன்களுக்காக பாடுவார் இந்த பாடல் கல்யாணம் பண்ணி அவஸ்தைபடும் கணவர்களுக்கானதாக இருக்கும் என்று செல்வா கூறியிருந்தார். மொத்தத்தில் அஞ்சல,வேணாம் மச்சான் வேணாம் வரிசையில் ஹாரீஸ் ஸ்டைல் தனுஷ் பாடலிது.




ஹாரிஸ் மெலோடிகளில் சிரத்தையை காட்டியுள்ளார். சில பாடல்களில் எங்கேயே கேட்ட மயக்கம் என்ற வார்த்தையை தவிர்க்கமுடியவில்லை. இவற்றை திருத்திக்கொண்டால் ஹாரீஸ் ஹாலிவூட் பக்கம் ஒரு வலம் வரலாம். அப்புறம் அதையே தமிழ்ல போடலாம்.ஒட்டுமொத்தமா பார்த்தால் ஆல்பம் இரண்டாம் உலகம் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கசெய்துள்ளது. நிச்சயம் ஒரு ஹிட் ஆல்பமாக கொள்ளப்படும். 

செல்வா-ஹாரீஸ் கூட்டணி இன்னுமொரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கு.

-ரோஷன் புவிராஜ்-