10/11/2012

சைக்கிள் திருடன்... Based on a true story


 (இந்த கதை ஏற்கனவே என் பேஸ்புக்கில் பகிர்ந்தது.  இங்கு பகிர்கிறேன்)


திகதி-2012.06.11
நேரம்-9.30AM
இடம்-என் வீடு


”டாய்  எழுபம்படா சோம்பேறி உண்ட வயசு பெடியள் இப்ப எழும்பிவேலை எண்டு போயிருப்பாங்கள்  9.30க்கு பிறகும் படுத்து இருக்கியே நீயெல்லாம் என்ன செய்யபோறியோ” என்று அம்மாட வழமையான   சுப்ரபாதம் ஒலித்துகொண்டு இருக்க.. வழமை போல கேட்காத மாரி நடிச்சுக்கொண்டே தூங்கிகொண்டிருந்தன்... அப்புறம் ஏதோ புது டயலக் வேற சேர்த்து  “இப்பிடி தான் ஒருத்தன் எப்பவும் தூங்கிட்டு இருக்கான் எண்டு டைவேர்ஸ் ஆகிட்டாம் அத போல தா.......................................” எண்டு அம்மா சொன்னவுடன் யாரோ மண்டைல டங்னு அடிச்ச மாரி இருந்துச்சு(என்ன இருந்தாலும் பியூச்சர் முக்கியமில்லோ)  உடன எழும்பி 10.00 மணிக்கு ஆயத்தமாயிட்டன். 
எதுக்கெண்டா கேக்குறீங்க ............. ஊர் சுத்த தான்......

சரி எண்டு இருக்கிற  சைக்கிள் எல்லாம் பார்த்தன் காத்து இல்ல ஒட்டு(பஞ்சர்) வேற அப்ப தான் நண்பன் குமாரு சொன்னது நினைவுக்கு வந்துச்சு என்னவா சொல்றன்”மச்சான் ஓவரா எல்லாரையும் கலாய்க்காதடா
இப்பிடி பண்ணினா சைக்கிள் அடிக்கடி காத்து போகும் இல்ல ஒட்டு வரும்”.....பட் அது ஒரு வகைல உண்மையாயும் இருக்கலாம்..சோ பீ கெயார் புல் பிரண்ஸ்........சரின்னு இருந்த ஒரு லேடீஸ் சைக்கிள எடுத்தன் அது எண்ட சொந்த காசில  வாங்கினது(”எங்க ஆட்டைய போட்டனீ ”ம்ம்ம் விளங்குது உங்க மைண்ட் வாய்ஸ்)  நொந்து நூலாகி ஒரு ஓரமா படுத்துகிடந்தத எடுத்தன். பார்த்தா எண்ட கடசி தம்பி ஒரு கடசி வேல பார்த்து இருந்தான்.....சைக்கிள் பாஸ்கட்டையும் சில்லையும் ஒரு வெள்ள  நூலால கட்டி இருந்தான். கடுப்பாகி கஸ்ரப்பட்டு நூல அறுத்துட்டன்...(கஷ்ரப்பட்டு எண்டது எண்ட உயிர் பிரன்ஸுக்கு விளங்கும்)இருந்தாலும் கொஞ்ச நூல் தொங்கிட்டு இருந்துச்சு அறுக்க பஞ்சியில அப்டியே விட்டுட்டன்...அப்ப தான் ஞாபகம் வந்துச்சு ”மகாபொல ஸ்காலர்சிப் செக்”  7500.00 இன்னும் பாங்ல மாத்தல எடுத்துட்டு எண்ட ஓட்டை பல்சர ஸ்ராட் பண்ணினன்..

யாழ்ப்பாண ரோட்டில ஒருத்தன் ஒவ்வொரு நாளும்  சைக்கிள் உழக்கினா வாழ்க்கைல அவனுக்கு கல்யாணம் காட்சி நடக்காது சோ பீ கெயர் புல் எண்டு நினைச்சுக்கொண்டே பாங்க்குக்கு அருகில பார்க் பண்ணினன்.....அப்ப தான் என்ன பண்ணலாம் 7500.00 வரப்போகுது நாலஞ்சு பில் கட்டணும்  வேற மிச்ச காசுக்கு வழமை போல ஏதும் பாடம் படிப்பு சம்பந்தமான கல்வி அறிவியல் சம்பந்தமான  புத்தகங்கள் கொப்பிகள் பாட நூல்கள் வாங்கலாம்னு(ஆ ஆஆ அழக்கூடாது பிரண்ஸ்)  நினைச்சு உள்ள போனன்.ஒரு மாரி கவுண்டர தேடி கண்டுபுடிச்சு செக்க மாத்த போக ஒரு ஆண்டி வந்து கேட்டா இங்க காசு போடலாமேன்னு எனக்கு ஒரே புழுகம் ”ஓம் அன்ரி” எண்டு சொல்லி பெருமை பட்டன்(நான் கண்டுபுடிச்சதே செக்கியூரிட்டிட்ட கேட்டுதான் எண்டது அவவுக்கு தெரியாது லொல்) .. தெரியாது எண்டு ஒண்ட யாரும் கேட்க நாங்கள் அத பத்தி சொல்லறப்போ ஒரே புழுகமாதான் இருக்கும்...ஹி ஹி ஹி....காசு மாத்தியாச்சு கவுண்டரில நல்ல வடிவான ஒரு “அக்கா” இருந்தா.(எல்லாப்பொண்ணுங்களும் எனக்கு அக்கா தங்கச்சிமாரின்னு ஆல்ரெடி சொல்லி இருக்கன்”)..என்ன தான் ட்ரை பண்ணாலும் பாங்ல சேரஏலாது(பி காஸ் வீட்லயே சேர்க்கிறாங்க இல்ல) என்ன நானே நொந்துகொண்டு வெளில வந்தன் அப்ப தான் அப்ப தான் அப்ப.......தான்..........ஒரு அதிர்ச்சி காத்து இருந்துச்சு.........................என்ன அதிர்ச்சிஎண்டா சொல்றன் அடுத்த பந்திக்கு வாங்க....

அது அந்த ரோட்டு கரைல பார்க் பண்ணி இருந்த எண்ட பல்சர காணல (லேடீஸ் பைக்னும் சொல்லலாம் அத)...மண்டையெல்லாம் விறைச்சு போச்சு...... “அந்த பீலிங் எப்டின்னா.................................
”நம்மள ஒரு பொண்ணு பார்த்து சிரிக்க அற் த டைம் அவ அப்பன்காரன் வருவானே அப்ப எப்டி இருக்கும்??
”“கடசி வாங்கில இருகிறப்போ தேடி புடிச்சு வாத்தியார் கேள்வி கேப்பாரே அப்ப எப்டி இருக்கும்”
“தியேட்டரில மொக்க படம் பார்க்கிறப்போ முன்னால இருக்கும் கப்பில்ஸ பார்க்கிரப்போ எப்டி இருக்கும்”
அப்டி இருந்துச்சு.................(கூல்..............)அப்ப எண்ட மனசில என்ன தோணிச்சு எண்டா...........
“அட கடவுளே கைல 7500 தந்துட்டு 7500ஆ வேற மாரி புடுங்க்கிட்டியே””.
ஒரு சபாரி அதான் நுளப்பு மோட்டர் பைக் துலைச்சு இப்ப தானே 4 மாசம் ஒரு வருசத்துக்கு முன்னால தானே 2 சைக்கிள் துலைச்சன் வீட்ட போனா சங்கு தான் பேசாம  நண்பன் கொமாரு பேஸ்புக்க்ல போடுற மொக்க காதல் தோல்வி கவிதகள  வாசிச்சுட்டு சாகாலாம்னு தோணிச்சு..”ஆனா ஒரு நிமிசம் சிந்திச்சன் ஏன் தேவல்லாமா கொமார கொல கேஸ்ல மாட்டுவான்னு நினைச்சு மனச தேத்திக்கொண்டன்.


”நம்ம சைட் அடிக்கிற பொண்ணுக்கு பேஸ்புக்ல மெசேஜ் பண்ணிட்டு  ரீப்லேய பார்த்துட்டு இருக்கிறமாரி” யாராச்சும் திருப்பி கொண்டுவந்து தரமாட்டாங்களா என் அஞ்சலய எண்டு ரோட்ட பார்த்துட்டு இருந்தன்....
அப்ப ஒரு மெடிக்கல் மிராக்கில் நடந்துச்சு.அரை குறையா அறுக்காம விட்ட அதே நூலோட ஒரு சில்லு சுத்திட்டு போகுது எனக்கு முன்னால மெதுவா நிமிர்ந்து பார்த்தா எண்ட சைக்கிள் ஒரே ஹாப்பி...
பெஸ்ட் டைம் கள்ளன புடிக்கபோறன்னு தான்.........துரத்திட்டு கூட போகல நடந்துபோயே வழிமறிச்சன் அவ்ளோ சிலோவா ஓடிட்டு போனார் அந்த கள்ளன் எண்டு நான்  நினைச்ச அந்த மனிதர்.....உடன இறங்கிட்டார் ஒரு 70 வயசுஇருக்கும் எனக்கு சிரிப்புவேற வந்துட்டு “ஐயா இது எண்ட சைக்கிள்”எண்டன்...........

அதுக்கு அந்தமனிசன் ஒண்டுமே நடக்காதது போல கீழ குனிஞ்சு பார்த்தார்(சைக்கிள் பெடலை) பின் கரியலை பார்த்தார் பெல் அடிச்சு பார்த்தார்.
 “ஓம் தம்பி எடுக்கேக்கயே நினச்சன் பேக் சைட்ல புதுசா இருக்கிறபோலவே   இருந்துச்சு” “ தம்பி எண்ட பேர்த்தின்ர சைக்கிள கொண்டுவந்தன் அதுதான் இது எண்டு நினைச்சு எடுத்துட்டன் ஓடேக்கயே ஒருமாரி தான் கிடந்துச்சு..அந்த கரைல நிக்குது அது தான் சைக்கிள் இந்தாங்க்கோ உங்கட சைக்கிள்” எண்டு என்னட்ட தந்துபோட்டு சொன்னார்.”அப்ப 2 திறப்பு உங்க சைக்கிள் பூட்டுக்கு சேருது என்ன தம்பி?” எண்டார். இப்பிடி சொல்ல எனக்கு சிரிப்போட கடுபாயிட்டு...சரின்னு எண்ட சைக்கிள் பூட்ட பார்த்தா உடைக்கல வேற திறப்புதான் போட்டு திறந்து இருந்துச்சு...மனிசன் சொல்ல்றாது நம்புறமாரித்தான் இருந்துச்சு ஏன்னா வயசும் போய்டு அதோட கூப்பிட்டவுடன ஓடாம நிண்டுச்சு இல்லோ......  மூஞ்சீ வேற அப்பாவியா இருக்க உண்மையை உணர்ந்தன்.ஆக்சிடன்லியா தான் இந்த சம்பவம் நடந்து இருக்கெண்டு.

இருந்தாலும் ஒரு நப்பாசை கள்ளனா இருந்தா புடிச்சு குடுத்தா அவார்ட்டு வேற தருவாங்க எண்டு நினைச்சுட்டு கேட்டன்”சரி தாத்த உங்க பேர்த்தின்ர சைக்கில் எண்டுறியள் எங்க காட்டுங்க உங்க திறப்புக்கு அது திறபடுதோ எண்டு கேட்டன்”..உடன தாத்தா ரோட்டில நிண்ட அந்த லேடீஸ் சைக்கிள காட்டி அத போய் திறந்து பாரும் எண்டு திறப்ப தந்தார்...எங்க அது திறபட்டுட்டு...அவார்ட்டு கனவு புஷ்ஷ்ஷ்ச்...............”தாத்தா எனிமே பார்த்து திறவுங்க உங்கள் கண்டிராவிட்டால் எண்ட சைக்கில் உங்களிட்ட உங்க சைக்கில் ரோட்ல தான் இருந்து யாரும் எடுத்துட்டு போயிருப்பாங்க”எண்டு சொல்ல அவரும் சிரிச்சுட்டார்....“சரி தம்பி மன்னிச்சுடுங்கோ” எண்டு சொல்லிடு போய்ட்டார்................நானும் வண்டிய கட்டரெடி ஆகிறப்போ தான் ஒண்டு ஸ்ரைக் ஆயிச்சு.

“தாத்தா பேர்த்தீன்னு சொன்னாரே....................................................
பேர்த்தின்னா பொண்ணு. தாத்தா சொன்னத வைச்சு பார்த்தா எங்கவயசு இருக்கலாம்.....
“அவட  திறப்புக்கும் எண்ட பூட்டுக்குமே அவ்ளோ கெமிஸ்ட்ட்ரி எண்டா நமக்குள்ள எவ்ளோ இருக்க்லாம்”
 பேர கேட்காமவிட்டுடியே இடியட் இரோஷ் எண்டு நினைகிறதுக்குள்ள தாத்தா 300 மீட்டர் தூரத்தில போய்ட்டார்......................வேற என்ன கொஞ்சம் வித்தியாசமான சம்பவமாச்சே எங்கயாச்சும் எழுதுவம்  எண்டு நினைச்சுக்கொண்டே வீட்ட போய் சேர்ந்தன்...........
மீண்டும் அம்மா ”எங்க போய்டு வாரா 2.30 ஆச்சு மத்தியான சாப்பாடு எனி சமைக்கல போற இடத்தில சாப்பிடு.........”
உனக்கெல்லாம் எப்ப பொறுப்பு வருமோ?”................

இப்படிக்கு இடியட் இரோஷ்.