11/08/2013

இரண்டாம் உலகம்-ஹாரீஸின் இசை


காதல் கொண்டேன்,7ஜி ரெயின்போ காலனி,புதுப்பேட்டை என்று யுவனின் அட்டகாசமான இசையுடன் கைகோர்த்த செல்வராகவன், யுவனுடனான பிரிவுக்கு பின்னர் ஆயிரத்தில் ஒருவன்,மயக்கமென்ன படங்களில் ஜீ.வீ.பிரகாஷை தெரிவுசெய்திருந்தார்.இருப்பினும் செல்வாவும் யுவனும் மீண்டும் இணையும் வாய்ப்புகள் இருப்பதாகவும் இரண்டாம் உலகம் படத்துக்கு யுவன் இசையமைக்க இருப்பதாயும் சில தகவல்கள் இணையவுலகில் வலம்வந்திருந்தது. ஆனால் வைரமுத்து-ஹாரீஸ் கூட்டணியிலே இரண்டாம் உலகம் படம் ஆரம்பிக்கப்பட்டது. 

இரண்டாம் உலகம் பாடல்கள் வெளிவந்த பின்னர் ஹாரீஸ் “கிங் ஒஃப் ரொமான்ஸ்” என்று அழைக்கப்படுவார் என்று செல்வா சொன்னது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் துப்பாக்கி படத்துக்கு பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரீஸ் இசையமைத்திருக்கும் படம் என்பாதால் என்னவோ ஒரிஜினல் மெலோடிகள் கொடுப்பதற்கு கொஞ்சம் மெனக்கட்டிருக்கிறார் மனிதர். ஹாரீஸுக்காக நீண்டகாலத்துபின்னர் மொத்த பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.




னி மொழியே”
பாடியவர்-கார்த்திக்.

கொஞ்சம் வில்லங்கமான பெயருள்ள பாடல் தான். கலைஞர் மேலுள்ள மரியாதையில் வைரமுத்து இப்படி பல்லவியை ஆரம்பித்து இருப்பாரோ என்னவோ.இப்டி சிந்திக்க வைத்தாலும் பாடல் கேட்டபின் ஒரு அணுவும் அசையாது என்பது போல் ஹாரீஸும் கார்த்துக்கும் நம்மை கட்டி போட்டுவிடுகிறார்கள். இந்த ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்தபாடல் இது.ஹாரீஸ் இசையில் கார்த்திக் பாடிய அவள் உலக அழகியே,ஒரு ஊரில் அழகே உருவாய்,விழி மூடி ஜோசித்தால்,ஹசிலி பிசிலி வரிசையில் இன்னொரு ஹிட் பாடல்.வழமையான ஹாரீஸ் கிட்டார் பின்னணிகள்,இடையிடையே புட்டிங்கில் பிளம்ஸ் போல பெண்குரல் கோரஸ்,தெளிவான நீரோடை போல குரல்,வரிகளை கொல்லாத இசை என்று இப்பாடலை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

-முத்தமா கேட்கிறேன் முறுவல் தான் கேட்கிறேன்.
-வலதுகால் எட்டுவை வாழ்க்கையை தொட்டுவை.

இரண்டு சரணங்களிலும் வரும் இந்த இரண்டு வரிகளையும் கார்த்திக் பாடும் இடம் அருமை.” வழமை போல வைரமுத்து கிளாஸ்.


ன்னவனே மன்னவனே”
பாடிவர்கள்-கோபால் ராவ்,ஷக்தி சிறீ கோபாலன்

பாடல் கிட்டாருடன் ஆரம்பிக்கும் போது வழமையான ஹாரீஸ் பாடல் என்று தோன்றவைத்தாலும் “மன்னவனே மன்னவனே” என்று வரிகளில் சப்ரைஸ் காத்திருக்க பாடல் கொஞ்சம் கிராமிய மெட்டோடு மேற்கத்திய இசையோடு பயணிக்க ஆரம்பிக்கும். நெஞ்சுக்குள்ளே,எங்க போனா ராசா என்று ரஹ்மானிடம் பாடிக்கொண்டிருந்த ஷக்திசிறீ கோபாலன் இப்பாடலுக்கு சரியான தெரிவு. இரண்டு இடைஇசைகளும் ஃப்லூட், பியானோ,வயலீன் இசைகளுடன் அழகாக கோர்க்கப்பட்டு இருக்கிறது. பாடலின் இடையே லைட்டா ஹாரீஸ் பாடல் ஒன்றின் தேஜா வூ பீலிங் வருவது எனக்கு மட்டுமா தெரியல. இந்த ஆல்பத்திலுள்ள இன்னுமொரு ஹிட் மெலோடி பாடல்.




ன் காதல் தீ”
பாடியவர்-எஸ்.பீ.பாலசுப்ரமணியம்.

இரண்டாம் உலகம் பாடல்களில் ஒரு மாஸ்டர் பீஸ் மெலோடி என்று சொல்லலாம். எஸ்.பீ,பீ இன் கம்பீரமான காதல் கொஞ்சும் குரல் அதற்கு மேல் கவிப்பேரரசின் வரிகள் கிளாசிக்கல் வாத்தியங்களின் பின்னணி இசை, பெண்குரல்களின் கோரஸ் என்றும் ஹாரீஸ் ஸ்டைலில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு மயக்குகிறது. முக்கியமாக இரண்டு இடையிசைகளும் அபாரம்.
இந்த பாடலில் வரும் சில வரிகள்.

”உடல்கள் இரண்டும் சேரும் முன் உள்ளம் இரண்டும் சேருமே
உடலின் வழியே உயிரை தொடுவது காதலே”
“இதயம் இரண்டும் தூரம் தான் இதழ்கள் நான்கும் அருகில் தான்
இதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே”

பாடும் நிலா பாடிய மலரே மெளனமா,காதல் ரோஜாவே வரிசையில் இந்த பாடலும் நிச்சயம் இடம்பெறும். பாடும் நிலாவை வைத்து இந்த ஜெனெரேஷன் இசை ரசிகர்களுக்கு ஒரு அழகான மெலோடியை கொடுத்த ஹாரீஸுக்கு நன்றிகள்.


விண்ணைத்தாண்டி அன்பே”
பாடியவர்-விஜய் பிரகாஷ்

வழமையான அக்மார்க் ஹாரீஸ் பாடல். கொஞ்சம் வேகமான எலக்ரானிக் இசையுடன் வானில் பயணிப்பது போல ஒரு உணர்வு. பாடலை கேட்கும் போது நிச்சயம் ஹாரீஸ் இசையில் விஜய் பிரகாஷ் பாடிய முன்னைய பாடல்கள் நினைவுக்கு வரும்.
“திசு அழிந்தாலும் தசை எரிந்தாலும் ஆன்மா அழியுமா”
கொஞ்சம் விஞ்ஞானமா வைரமுத்து கேள்விகேட்கிறார்.




ராக்கோழி ராக்கோழி”

பாடிவர்கள்-ஹரிஹரன்,சிறீராம்

இந்த பாடலிலும் ஒப்பனிங்குக்கும் பாடலுக்கும் இடையே பெரிய ஒரு இடைவேளை. வீரபாண்டிக்கோட்டையிலே பாடல் ஸ்டைலில் ஒரு பாடல்.இந்த பாடாலுக்கு அவ்வளவு மெனக்கட்டு இருக்கமாட்டார் ஹாரீஸ்.கொஞ்சம் ஆக்ரோஷமாக ஹரிஹரன் ஆரம்பிக்க சிறீராம் அதை பிக் ஆப் பண்ண பாடல் தொடரும் இரண்டு சரணங்களிலும் ஹரிகரனும்,சிறீராமும் பகிர்ந்து பாடியுள்ளனர். இரண்டு சரணங்களும் முடியும் இடங்களில் ஃபீல்  அருமை.


னங்கள்ளு விஷமுள்ள”
பாடியவர்-தனுஷ்

”வை திஸ் கொலவெறி”ன்னு எப்ப பாடினாரோ அன்னைக்கு ஆரம்பிச்ச கிக்ஸ்ரார்ட் இன்னும் ஓடிட்டு இருக்கு என்றால் தனுஷ் ஒரு அதிஷ்டசாலி என்று சொல்லமுடியாது. தனக்கேற்ற இலகுவான பாடல்களை தெரிவு செய்து ஒரு பாடகராக தன்னை நிருபித்து வருகிறார் சூப் பாய் தனுஷ். தனுஷும் ஹாரீஸும் இதுவரை எந்த படத்திலும் பணியாற்றவில்லை.இருந்தாலும் இந்த பாடல் மூலம் அந்த குறையை நிவர்த்திசெய்த்துள்ளனர்.வழமையாக தனுஷ் காதல் தோல்வி பையன்களுக்காக பாடுவார் இந்த பாடல் கல்யாணம் பண்ணி அவஸ்தைபடும் கணவர்களுக்கானதாக இருக்கும் என்று செல்வா கூறியிருந்தார். மொத்தத்தில் அஞ்சல,வேணாம் மச்சான் வேணாம் வரிசையில் ஹாரீஸ் ஸ்டைல் தனுஷ் பாடலிது.




ஹாரிஸ் மெலோடிகளில் சிரத்தையை காட்டியுள்ளார். சில பாடல்களில் எங்கேயே கேட்ட மயக்கம் என்ற வார்த்தையை தவிர்க்கமுடியவில்லை. இவற்றை திருத்திக்கொண்டால் ஹாரீஸ் ஹாலிவூட் பக்கம் ஒரு வலம் வரலாம். அப்புறம் அதையே தமிழ்ல போடலாம்.ஒட்டுமொத்தமா பார்த்தால் ஆல்பம் இரண்டாம் உலகம் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கசெய்துள்ளது. நிச்சயம் ஒரு ஹிட் ஆல்பமாக கொள்ளப்படும். 

செல்வா-ஹாரீஸ் கூட்டணி இன்னுமொரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கு.

-ரோஷன் புவிராஜ்-

02/05/2013

எதிர்நீச்சல்- திரைவிமர்சனம்


நடிகர்கள்-சிவகார்த்திகேயன்,ப்ரியா ஆனந்த்,நந்திதா,சதீஷ்,ஜெயபிரகாஷ்
இசை-அனிருத்
ஒளிப்பதிவு-வேல்ராஜ்
எடிட்டிங்-கிஷோர்
எழுதி இயக்கியவர்-துரை செந்தில்குமார்
தயாரிப்பு-தனுஷ்

சுமாரான கதையும் சிவகார்த்திகேயனினதும் பரோட்டா சூரியினதும்   சரவெடிகள் ஆங்காங்கே இருந்ததாலும் வெற்றிக்கொடியை நாட்டிய
கேடி பில்லா கில்லாடி ரங்காவுக்கு பின்னர் சிவகார்த்திகேயன் சோலோ ஹீரோவாக நடித்துவெளிவந்திருக்கும் படம் எதிர்நீச்சல்.
சிவகார்த்திகேயனின் பாட்டி வைத்த குஞ்சிதபாதம் என்ற பெயரால் தன் வாழ்கையில் அனேக சந்தர்ப்பங்களில் அசிங்கப்படும் சிவகார்த்திகேயன் தனது பெயரை ஹரீஷ் என்று மாற்றிக்கொள்கிறார்.அதன் பின் அவர் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் தான் எதிர்நீச்சல்.சின்ன சின்ன விசயங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்
இந்த ஒன்லைனை  வைத்து ரசிக்கவைக்கும் காமடி,செண்டிமண்ட்,கொஞ்சம் அலட்டல்கள்,கலக்கலான பாடல்களுடன் ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குமர் துரை செந்தில்குமார்.

சிவகார்த்திகேயன்.

குஞ்சிதபாதம் என்ற பெயரை வைத்துக்கொண்டு அவஸ்தை படுவதாக இருக்கட்டும்,ஓனரின் குண்டுப்பையனை வைத்து ப்ரியா ஆனந்தை லவ்வுவதாக இருக்கட்டும் முற்பாதியில் காமடியில் அசத்துகிறார்.பாடல் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.நடிப்பில் ஒரு மெச்சூரிட்டி, பாடிலாங்குவேஜ்,காஷ்டியூம்ஸ் எல்லாவற்றிலும் கொஞ்சூண்டு ரிச் லுக் தெரிகிறது.இப்படியே போனால் அடுத்த படத்தில் சீ.பீ,ஐ ஆபீசராகவும் நடிக்கலாம் இவர்.ஆனால் பிற்பாதியில் ஓட்டவீரனாக ஸ்கோர் செய்யவேண்டிய இடங்களில் கொஞ்சம் சொதப்பிவிட்டாரோ என எண்ணத்தோன்றியது.அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் ஸ்மார்ட்டாக ஒரு ஓட்டவீரனின் பாடிலாங்குவேஜ்ஜை ஸ்ரடி பண்ணியிருக்கலாம்.

அனிருத்.

 இந்த படத்தோட இன்னொரு ஹீரோ என்று சொல்லலாம்.ஐந்து,ஆறு மாதங்களுக்கு முன்னரே பாடல்கள் வந்து பாக் டூ பாக் ரேடியோக்களில் ஒலித்து இப்படத்துக்கு நல்ல ஒரு பப்லிசிட்டியை கொடுத்திருந்தது. “வெளிச்சப்பூவே” மெலோடியாக இருக்கட்டும் “பூமி என்ன சுத்துதே” ,”ஸ்பீடு ஸ்பீடு” ,”நிஜமெல்லாம் மறந்துபோச்சு”,பாடல்கள் எல்லாமே கலக்கல். அதிலும் வெளிச்சப்பூவே பாடல் அவ்ளோ அழகாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.அனிருத்தும் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.
”லோக்கல் பாய்ஸ்” பாடல் வலிந்து திணிக்கப்பட்டு இருப்பினும்  தனுஷ்,சிவா,நயந்தாரா என்று குத்தாட்டத்தில் பின்னிபெடலெடுத்திருந்தனர்.
பின்னணி இசையில் ஒரு முதிர்ச்சியான ஒரு இசையமைப்பாளர் போல செயற்பட்டுள்ளார்.இனிவரும் காலங்களிலும் பின்னணி இசையில் கவனம் செலுத்தினால் நல்ல எதிர்காலம் இருக்கு.

ப்ரியா ஆனந்த்&நந்திதா.

 

முற்பாதியில் ரீச்சராக சிவகார்த்திகேயனின் வெளிச்சப்பூவாக விதவிதமான சாறிகள் அணிந்து மனசில் ஒட்டிக்கொள்கிறார் ப்ரியா ஆனந்த்.
அதிலும் வெளிச்சப்பூவே பாட்டில் பொண்ணு அப்டி ஸ்கோர் செய்திருக்கு.
180 படத்திற்கு பிறகு நேரடி தமிழில் ப்ரியா ஆனந்துக்கு நல்ல ஒரு ஸ்கோப் எதிர்நீச்சல் மூலம் கிடைக்கவாய்ப்புண்டு. பிற்பாதியில் வழமையான ஹீரோயின்கள் செய்வது போல ரெண்டு சீன்களில் தலைகாட்டுகிறார்.

பணக்கார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை ஓட்ட வீராங்கனையாகவும், சிவகார்த்திகேயனுக்கு கோச்சாகவும் பிற்பாதியில் முழுக்க வருகிறார் நந்திதா.அட்டகத்தி படத்துக்கு பின்னர்   நல்ல ஒரு கரக்டர் அளவான நடிப்பைகொடுத்திருக்கிறார்.

வேற என்ன....???

சிவாவின் நண்பனாக வரும் சதீஷ் கிடைக்கும் காட்சிகளிலெல்லாம் பின்னியிருக்கிறார்.அதிலும் குறிப்பாக மதன் பாப்பை கலாய்க்கும் காட்சிகள் அருமை.சிவா-சதீஷ் கூட்டணி இனிவரும் படங்களிலும் ஒரு காமடி ட்ரெண்டை உருவாக்கலாம்.மனோபாலா ஒரு காட்சியில் வந்தாலும் வெடிச்சிரிப்பை ஏற்படுத்துகிறார்.அதுவும் கேசவன் என்ற பெயர் K7 ஆயிருப்பதால் K9(கேனையன்) ஆக மாற்றினால் வெற்றி நிச்சயம் என்று பீலா விடுவது அதன் பின்னர் வரும் சீனும் கலக்கல்.சிவாவை ஆரம்பத்திலே ஒரு மரதனோட்ட வீரனாக காட்டுவது பிற்பாதி லாஜிக்கிற்கு கொஞ்சம் உதவியிருக்கிறது.

இவற்றைவிட அண்மையில் வைத்திய பரிசோதனையில் ஆண் என நிருபிக்கப்பட்டு பதக்கங்கள் பறிக்கப்பட்டதாக இந்திய வீராங்கனை பிங்கி பற்றி ஒரு செய்தி படித்திருப்போம். இந்த ஒரு வரிச்செய்தியை கொஞ்சம் மாற்றியமைத்து நந்திதாவின் கரக்டரை உருவாக்கிய இயக்குனருக்கு சபாஷ்.

இன்றைய இளைஞர்கள் தமக்கு தம் பெற்றோர்கள் வைக்கும் பெயரை ஆங்கில கலப்புடனும்,ஸ்டைல் என்ற பெயரில் வேற்றுமொழிகளையும் கலந்து பெயர் மாற்றம் செய்வது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த பேஸ்புக்கில் இது போன்ற கண்றாவிகளை காணலாம்.
ஆனால் நம் மூத்தோர் நமக்கு வைக்கும் பெயர் என்பது நம் சந்ததியின் அடையாளம் என்றும் பெயர் மாற்றுவதை விட சொந்த பெயரை வைத்து பேர் எடுப்பதே திறமை என்னும் அழகான சமுகக்கருத்தை நகைச்சுவை, செண்டிமண்ட் கலந்து சொன்னதற்கும் இயக்குனருக்கு பாராட்டுகள்.


இப்படி பிளஸ்கள் இருந்தும் பிற்பாதி ஆமை வேகத்தில் நகர்கிறது.
அனைத்தும் ஏற்கனவே சலிப்பூட்டிய ஊக்கிக்ககூடிய காட்சிகளாக கோர்க்கப்பட்டுள்ளது.சில காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம் என தோன்றுவதை தடுக்கமுடியவில்லை.
அந்த கிளைமாக்ஸ் 10 நிமிடகாட்சிகள் எப்படியோ படத்தை முடிக்கவேண்டும் எனும் நோக்கில் செயற்கை தனமாக நகர்கின்றன. சிவாவை மரதன் ஓட்டப்பந்தய வீரனாக ஜீரணிக்கமுடியவில்லை. அப்படியொரு செயற்கைதனம்.நந்திதாவின் கோச்சாக வரும் ஜெயபிரகாஷ்,பணக்கார கோச்சாகவரும் ரவி பிரகாஷ் வழமையாக படங்களில் பார்த்து சலித்த கரக்டர்கள்.ஜெயபிரகாஷ் போன்ற ஒரு திறமையான நடிகர் இவ்வாறான கரக்டர்களை தவிர்க்கலாம்.முற்பாதியில் திடீரென்று தான் ஏதும் சாதிக்கவேண்டும் என்று கண்சிவந்து சிவா கிளம்புவது பிற்பாதிக்கான வழியாக இருப்பினும் ஒட்டவில்லை.இவற்றை கொஞ்சம் சரி செய்திருந்தால் எதிர்நீச்சலை மொத்தமாக இன்னும் கொண்டாடியிருக்கலாம். இருப்பினும் இயக்குனர் எதிர்நீச்சல் மூலம் சிவகார்த்திகேயனை வெற்றிகரமான சோலோ ஹீரோவாக ஒரு படி மேல் கொண்டு வைத்திருக்கிறார்.


வன் இரோஷன்.









01/05/2013

ஆனந்த யாழை மீட்டும் யுவனின் தங்கமீன்கள் பாடல்கள்.



சில மாதங்களுக்கு முன்னர் ”கற்றதுதமிழ்” ராம் அவர்களின் “தங்கமீன்கள்” ட்ரெய்லர் வந்திருந்தது.அந்த ட்ரெய்லரில் வரும் உணர்ச்சிபூர்வமான வசனங்களையும் காட்சிகளையும் பார்த்தபோது அது ஒரு படத்துக்கான முன்னோட்டம் போல தெரியவில்லை.மூன்று நிமிடங்களில் ஏதோ ஒரு உணர்ச்சிபூர்வமான புது உலகில் பயணித்த மயக்கம். யூ ரியூப்பில் பல லட்சக்கணக்கானோர் பார்வையிட்டும்,தங்கள் ஆதரவையும் வழங்கியிருந்தனர்.இந்த ட்ரெய்லருக்கு யூரியூப்பில் இடப்பட்டிருக்கும் பின்னூட்டங்களை பார்த்தபோது ஒரு படைப்பாளியால் எவ்வளவு தூரத்திற்கு ஒருவரின் மனதின் ஆழம் வரை செல்லலாம் என்பதை அறிந்துகொண்டேன். தங்கமீன்கள் படத்தின் ட்ரெய்லரில் ஆனந்தயாழை மீட்டுகிறாயடி” என்று ஒரு பாடல்வரும் அதைகேட்டதிலிருந்தே  பாடல்களுக்கு காத்திருக்க தொடங்கிவிட்டேன்.


அத்தோடு கற்றது தமிழ் ராம் அவர்களின் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இன்னொரு முகத்தை காணலாம் என்ற பூரணநம்பிக்கை இருந்தது. ராம்&யுவன் ஏற்கனவே “கற்றது தமிழ்” படத்தில் கைகோர்த்திருந்தனர்.கடந்த 10  ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான கற்றது தமிழ் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் உயிரோட்டமான பாடல்களும் படத்தை இன்னொரு படிமேல் கொண்டு சென்றது என்றால் மிகையாகாது. என்னை மிகவும் பாதித்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

இப்போதும் நா.முத்துகுமார் வரிகளில் “பறவையே எங்கு இருக்கிறாய்” .”பறபற பட்டாம்பூச்சி” “இன்னும் ஓர் இரவு”, “உனக்காக தானே” பாடல்களை கேட்கும் போது நெஞ்சம் கனக்கும்.நீண்டநாள் காத்திருப்பின் பின்னர் இன்று தங்கமீன்கள் பாடல்களை தரவிறக்கி கேட்டேன்.மிகவும் பிடித்துவிட்டது. இந்த ஆல்பத்தில் மொத்தம் நான்கு பாடல்கள்.இந்த பாடல்கள் அனைத்தையும் நா.முத்துகுமார் எழுதியுள்ளார். ஒவ்வொரு பாடலின் ஆரம்பத்திலும் இயக்குனர் ராம் அவர்களின் குரலில் உணர்ச்சிபூர்வமான வசனங்கள் வரும் அதன் பின் பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும்.

னந்த யாழை மீட்டுகிறாயடி”

பாடியவர்-சிறீராம் பார்த்தசாரதி
.
இயக்குனர் ராமின் குரலில்”மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை  என்று” என்ற அழகான வசனத்துடன் பாடல் ஆரம்பிக்கும்.
இந்த பாடலை பற்றி என்ன சொல்ல இந்த பதிவை எழுத தூண்டியதே இந்த பாடல் தான்.ஒரு பாடலில் உயிர் இருக்கிறது என்பார்கள்.அதை அறிந்திராதவர்கள் இந்த பாடலை கேளுங்கள்.இந்த பாடலை கேட்டு யுவன் என்னோட மகன் என்று இசைஞானி நிச்சயம் பெருமைப்படலாம்.
சிறீராம் பார்த்தசாரதி தமிழில் இடையிடையே தலைகாட்டிச்செல்லும் மிக திறமையான பாடகர்.ரஹ்மான் அவர்களால் “அதிசய திருமணம்” பாடல் மூலம் அறிமுகமாகி  ஏற்கனவே இளங்காத்து வீசுதே,சுட்டும் விழிச்சுடரே,வெண்பனியே,புதுமலர்த்தோட்டத்திலே போன்ற மிக பிரபலமான பாடல்களை பாடிவர். இந்த பாடல் மூலம் நிச்சயம் மறக்கமுடியாத பாடகராகிவிட்டார்.நா.முத்துகுமார் மீண்டுமொரு தடவை தன் பேனாவால் உணர்வுகளை கொட்டிசென்றுள்ளார்.ஒவ்வொரு வரிகளும் மிக அருமை.

 பாடல்வரிகள்:

னந்த யாழை மீட்டுகிறாயடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாயதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாசைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் மலையின் அழகோ தாங்கவில்லை
உந்த கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லையென்று தோன்றுதடி

தூரத்துமரங்கள் பார்க்குதடி தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்தே பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லையென்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாயடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்....

உன்முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லையென்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாயடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.....


ஒரு தந்தை தன் மகளின் குழந்தைத்தனத்தை அவள் குறும்பில் கிடைக்கும் இன்பத்தை இதை விட வேறு எப்படி பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் பாடமுடியும்.
என்னைபொறுத்தவரை எனது கணிப்பில் இதுவரை வந்த பாடல்களில்  இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல் இது.



தி வெள்ளம்”

 பாடியவர்-ராகுல் நம்பியார்

”அப்பாக்களை பிரியா மகள்கள் அதிஷ்டசாலிகள் மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்  ஆனால் அப்படியெல்லாம் தந்துவிட வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை”
இவ்வாறு ராமி அவர்களின் குரலுடன் பாடல் தொடங்கும்.
ராகுல் நம்பியார் பாடியுள்ளார். இவர் ஏற்கனவே இதே கூட்டணியில் “கற்றது தமிழ்” படத்தில் “பற பற பட்டாம்பூச்சி” என்ற அழகான் பாடலை பாடியிருப்பார். பொதுவாக குத்துபாடல்களையே பாடும் ராகுல் நம்பியார் இப்படிப்பட்ட பாடல்களையும் பாடினால் நன்று.
தந்தை தன் மகளை பிரிந்து தவிக்கும் போது பாடும்பாடலாக அமைந்துள்ளது.
ஆனந்த யாழை மீட்டுகிறாயடி பாடலுக்கு அடுத்தபடியா என்னை கவர்ந்தது.
”அலைந்திடும் மேகம் அதை போல இந்த வாழ்க்கையே காற்றின் வழியில் போகின்றோம்.
கலைந்திடும் கோலம் என்ற போதிலும் அதிகாலையில் வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்”
போன்ற வரிகள் வழமையான முத்துக்குமார் ரகமாயிருப்பினும்,
”மலரொன்று வீழ்ந்தால் அதை ஏந்த  பலர் ஓடுவார் இலைகள் வீழ்ந்தால் சருகாகும்.
வறியவன் வாழ்க்கை இலைபோல என்ற போதிலும் சருகுகள் ஒரு நாள் உரமாகும்”
போன்றவரிகள் அற்புதம். மேலும் பாடலின் இடையெ வரும் இடைஇசைகளும் மயக்கும்.

யாருக்கும் தோழன் இல்லை”

பாடியவர்-அல்போன்ஸ் ஜோசப்

“மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடகூடாது என்கிற வாழ்க்கையை தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்”என்ற வார்த்தைகளுடன் ஆரம்பிக்கும் பாடல்.ஆரோமலே பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ் ஜோசப்பின் குரலில் அவருக்கேயுரிய பாணியில் இன்னொரு உருக்கமான பாடல். மகளின் விருப்பதை தீர்க்க முனையும் தந்தை ”சொன்ன தேதி சொன்னநேரம் உன்னை வந்து சேருவேன் இல்லையென்று ஆகும் போது என்னை நானே கொல்லுவேன்” பாடும்விதமாக 2.50 நிமிடம் ஒலிக்கிறது.

"First Last"

பாடியவர்கள்- பேபி சாதனா,பேபி சஞ்சனா

“அப்பாக்களும் பிள்ளைகளும் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஒரே இடம் பள்ளிக்கூடம் மட்டும் தான்” என்று ஆரம்பிக்கும் ஒரு ஜாலியான பாடல்.
இந்த பாடலை பாடிய பேபி சாதனா தான் இந்த தங்கமீன்களின் செல்ல மகள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த பாடலை கேட்கும் போது அழகி படத்தில் இடம்பெற்ற “டமக்கு டமக்கு டம்” பாடல் லைட்டாக வந்து போவதை தவிர்க்கமுடியவில்லை.பாடல் வரிகளை மிக குறும்பாக எழுதியுள்ளார் பாடலாசிரியர்.

யுவன் ஷங்கர் ராஜா அண்மைக்காலமாக மனதில் நிற்கும்படியான பாடல்களை  தருவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இசை ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதற்கு “மூன்று பேர் மூன்று காதல்” இசை மூலம் தன்னை மீண்டும் நிலைநிறுத்திய யுவன் தங்கமீன்கள் பாடல்கள் மூலம் இன்னும் உயரம் சென்றுவிட்டார். பாடல்கள் படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
தங்கமீன்களுக்காக காத்திருக்கும்,
வன் இரோஷன்.



21/04/2013

உதயம் NH4-திரைவிமர்சனம்



சித்தார்த்(ஹீரோ)
*******************


 

# டூயட் பாடல்,சண்டைக்காட்சிகள்(ஓரளவு சகிக்ககூடிய),காதல் காட்சிகள் (சகிக்கமுடியாத) உடன் புத்திசாலித்தனமான ஒரு ஹீரோவாக படம் முழுக்க வருகிறார்.
# பல பெண்கள் கவர் போட்டோக்களில் மாட்டும் ஒரு அழகான ஹீரோவை ஏன் இப்படி படம் முழுக்க சிரிச்சாப்போச்சு என்பது போல உம் என்றே இயக்குனர் நடிக்கவைத்துள்ளார் என்பது கேள்விக்குறி.
# இந்த படத்தில் தமிழில் பேசும் ஒரே ஒரு நபரும் இவரே.

#ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்துள்ளார் சித்தார்த்.
# இருப்பினும் சித்தார்த்துக்கு இந்த படம் தமிழில் நல்ல ஒரு மீள்வரவு.



கே.கே.மேனன்(வில்லன் மாதிரி)

************************************




# இந்த படத்தில் ரசித்த கரக்டர் இவரோடது தான்.
# சில இடங்களில் பார்வையாலே கலக்குகிறார்.
# இந்த படத்தில் பல சீன்களில் பாராட்டையும் சில சீன்களில்(கிளைமாக்ஸ்)     பரி
தாபத்தையும் ஏற்படுத்துகிறார்
#படம் ஆரம்பித்ததிலிருந்து முடிவுவரை இவரது பாடிலாங்குவேஜ் அருமை. .
# ஹிந்தி சினிமாவில் நானா படேகர்,இர்பான் கான்,மனோஜ் பாஜ்பேய்,நவ்ஷுதின் சித்திக்,வரிசையில் கே.கே மேனனுக்கும் ஒரு இடமுண்டு.
# அவரின் சில ஹிந்தி படங்களோடு ஒப்பிடும் போது இது அவருக்கு ஒரு சாதாரண படமே.




அஷ்ரிதா ஷெட்டி(ஹீரோயின்)  

*********************************

# நாங்க இங்லீஸ் பேசினா எப்டி இருக்குமோ அப்டி இருக்கு இந்த பொண்ணோட தமிழ்.
# நிறைய இடத்தில் ஒரே டயலக்கை பேசி வெடிச்சிரிப்பை ஊட்டியவர் இவர் தான்.
# சில ட்ரெஸ்களில் அழகா தெரிகிறார் அடுத்த ஷாட்லயே சப்பையா காட்சியளிக்கிறார்.
# “இந்த பொண்ணு அட்டு பிகரா குட்டு பிகரா???”
படத்தோட பெரிய சஸ்பென்ஸ்ல இதுவும் ஒன்று.

வேற என்ன?
**************
# சாதாரண கதையாக இருந்தாலும் கொஞ்சம் சுவாரஷ்யமாக சொன்ன இயக்குனர் குழுவினரை பாராட்டியே ஆகவேண்டும்.
# ஒன்றிரண்டு “ட்விஸ்டுகள்” இருப்பதால் படம் தப்பிக்க வாய்ப்புகள் உண்டு.
# இத விட படத்தில் சித்தார்த் நண்பனாக வரும் குண்டுப்பையன், சின்சியர் ஆபீசராக வரும் மனிதர் உண்மையிலேயே கலகலப்பை ஊட்டுகின்றனர்.
# ஜீ.வீ யின் பாடல்கள்  “யாரோ இவன்” அழகான மெலோடி
“ஒரக் கண்ணால” கானா ரகம். ரசிக்கவைக்கின்றன.
# பின்னணி இசையில் மயக்கமென்ன,மதராசபட்டணம் பாடல்களை மீள இசைத்து எரிச்சலூட்டுகிறார்.
# ஒளிப்பதிவாளர் சில சீன்களீல் கலக்கியுள்ளார்.
இதற்கு உதாரணமாக சித்தார்த் ட்ரெய்னில் தப்பி போகும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி என்பனவற்றை கூறலாம்.
# படத்தில் சில சீன்கள் ரசிக்கவைத்தாலும் இடையிடையே வரும் பாடல்கள்,சகிக்க முடியாத காதல்காட்சிகள் படத்துக்கு வேக தடைகள்.
# படத்தில் கதாநாயகி உட்பட மூன்று கரக்டர்கள் கே.கே.மேனனுக்கு தாங்க ஏதோ இயக்குனராயும் கே.கே மேனன் ஏதோ தயாரிப்பாளர் போலயும் எண்ணி
இது தான் நடந்துச்சு என்றுஃபீல் பண்ணி கதை சொல்கிறார்கள் .
அதிலும் முதலில் கதை சொல்லும் பணக்கார பையன் “காக்கா எண்ட வடையை தூக்கிடிச்சு டீச்சர்” பாணியில் சொல்கிறார்.
அங்கேயும் நிச்சயம் வயிறுகுலுங்க சிரிக்கலாம்.
# இப்டி ஆங்காங்கே ஒட்டைகளும் ரசிக்கக்கூடிய விசயங்களும் படத்ல இருக்கு.

# மொத்தத்தில் வெற்றிமாறன் கதை,வசனத்தில் என்பதோடு புத்திசாலித்தனமாக நிறுத்தி தன் உதவி இயக்குனர் மணிமாறனை இயக்குனராக களமிறக்கி ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்.

10/01/2013

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்-ஆறிலிருந்து ஆஸ்கார் வரை -பாகம்-2

இந்த தொடரின் முதல் பகுதியை வாசிக்க............


 ................."சிறுவன் திலிப்புக்கு  இலத்திரனியல் சாதனம் என்றால் கொள்ளை பிரியம்.15 வயதை அடைந்ததும் குடும்பப்பொறுப்புகள் காரணமாக தனது படிப்பை சரியாக தொடரமுடியவில்லை.சிறு சிறு வேலைகள் செய்தான்.தான் முதன் முதாலாக பெற்ற சம்பளம் 50 ரூபா என்றும் அது ஒரு ரெக்கோர்ட் பிளேயர் பழுதுபார்த்தற்கு கிடைத்தகாக ஒரு பேட்டியில் சொல்கிறார் ரஹ்மான். இலத்திரனியல் சாதனங்கள் மீதான உந்துதலே ரஹ்மானின் பாடல்கள் அதி உன்னத ஒலிநயத்துடன் வெளிவர வித்திட்டன. பதினெட்டு வயதாகியதும் அதிகாலையில் வீட்டைவிட்டு புறப்பட்டு ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றில் பணியாற்றி பின் மாலையில் இசைநிகழ்ச்சி பங்குபற்றிவருவான் திலீப். இடைநேரத்தில் பள்ளிப்படிப்பும் அரைகுறையாக சென்றது.இருப்பினும் திலீப்பின் வருமானம் அவர்களின் குடும்பத்தை கொண்டுசெலுத்த போதியதாயிருந்தது.

மனம் தளரவில்லை இசை தான் வாழ்க்கை என்று சிறு வயதிலே முடிவு செய்தமையால் படிப்பு பற்றி கவலைப்படவில்லை.மிகப்பெரிய உச்சத்தை அடையவேண்டும் என்றால் சில சிலவற்றை இழக்கவேண்டிவரும் அது ரஹ்மானின் வாழ்க்கையிலும் நடந்தது.ஆனாலும் பிற்காலத்தில் பள்ளிப்படிப்பை பூர்த்தி செய்யாவிடினும் இசைமூலமாக மியாமி பல்கலைகழகத்தால் டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவிக்கப்பட்டார்.


வாய்ப்புகளை தேடி அலைந்தார்.அதன் விளைவாக இசைஞானி, எம்.எஸ்.வீ மற்றும் தெலுங்கு இசையமைப்பாளர் கோட்டி,ரமேஷ் நாயுடு ஆகியோரிடம் இசை உதவியாளராக பணியாற்றினார்.இதுவே பின்னர் படவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க முதலாக இருந்தது.மேலும் எம்.எஸ்.வீயே தனக்கு மிக பிடித்த இசையமைப்பாளர் என்றும் ரஹ்மான் கூறுகிறார்.சங்கமம் படத்தில் ”மழைத்துளி மழைத்துளி” பாடலையும்,கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ”விடைகொடு எங்கள் நாடே” பாடலையும் பாடவைத்தார்.



அதன் பின்னர்  ட்ரினிட்டி பல்கலைக்கழக இசைசம்பந்தமான உயர் படிப்பை கற்றார். பிரபல தபேலா இசைக்கலைஞர் ஷாகிர் ஹிஸைன்,குன்னக்குடி வைத்தியநாதன், சிவமணி ஆகியோருடன் இணைந்து மேடை நிகழ்ச்சிகள் வழங்கினார். ரஹ்மான் பிரதான கீ.போர்ட் கலைஞராகவும் ட்ரம்ஸ் வாத்தியகலைஞர் சிவமணி,ஜோன் ஆண்டனி,ரஹ்மானின் இசையில் பேட்டை ராப்,சிக்குபுக்கு ரயிலே உள்ளிட்ட பல பாடல்கள் பாடிய சுரேஷ்பீட்டர்,ஜோஜோ,ராஜா போன்ற நண்பர்களுடன் ROOTS என்னும் இசை குழுவொன்றை சில காலம் நடத்திவந்தார்.

இதற்கிடையில்திலீப்குமாரும் அவரது குடும்பத்தினரும் சொந்த விருப்பின் பேரில் 1989 ஆம் ஆண்டு இஸ்லாமிய மத்தை தழுவிகொண்டார்.இது தங்கள் உடனடி முடிவாக இருக்கவில்லையெனவும் 10 வருசமாக இதை பற்றி ஆலோசித்தே இஸ்லாம் மார்க்கத்தை தழுவியதாகவும் பின்னொருநாள் பேட்டியொன்றில் ரஹ்மான் கூறியுள்ளார். அத்தோடு மட்டுமில்லாது தீன் இசைமாலை என்னும் இஸ்லாமிய கீதங்கள் அடங்கிய இறுவெட்டு ஒன்றை திலீப்குமார் என்றபேரில் வெளியிட்டார்.

இப்பாடல்களை மனோ, சுஜாதா மற்றும் ரஹ்மானின் இனிய தோழர் ஷாகுல் ஹமீத் ஆகியோர் பாடினர்.ஷாகுல் ஹமீத் பின்னாளில் ரஹ்மானின் இசையில் ராசாத்தி என் உசிரு, செந்தமிழ்நாட்டு தமிழச்சியே,ஊர்வசி ஊர்வசி போன்ற் ஹிட் பாடல்களை பாடினார்.பின்னர் ஷாகுல் ஹ்மீத்தின் அகால மரணம் ரஹ்மானை பெரும் வேதனைக்குள்ளாக்கியது.இன்றும் ஷாகுல் ஹமீத்தின் குடும்பத்துனருக்கு உறுதுணையாக ரஹ்மான் உள்ளார்.அதன் பின் இஸ்லாமிய சம்பிரதாயங்களுக்கு ஏற்ப திலீப்குமார் தனது பெயரை அல்லா ரக்கா ரஹ்மான் என்று மாற்றி கொண்டார்.

 தீன் இசைமாலையில் ஹாகுல் ஹமீத் பாடிய இஸ்லாமிய பாடல் இது.



ட்ரினிட்டி பல்கைலைகழக மேற்படிப்பை முடித்துக்கொண்ட ரஹ்மான் தனது வீட்டிலே ஒரு ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றை அமைத்து விளம்பரப்படங்களுக்கும், ஜிங்கில்ஸ் எனப்படும் குறு இசைகளையும் வழங்கிய வண்ணம் இருந்தார். ரஹ்மான் இந்திய இசையை தாண்டி சர்வதேச இசையை ரசிக்க தொடங்கினார்.
அதில் காணப்படும் நுட்பங்களை ஆராய்ந்தார்.பிரபல மேற்கத்திய கீபோர்ட் சரித்திரம் ஜானியே ரஹ்மானின் மானசீக குரு ஆவார்.அவரை போலவே தலைமுடி வளர்த்து அவரின் ஸ்டைலிலே பின்னாளில் மேடைநிகழ்ச்சிகளில் தோன்றினார்.

 
Yanni-Raimaker stage performace

மேலும் வெங்காலிஸ்,எனிக்மா,ஹான்ஸ் ஸிம்மர் போன்றோர் ரஹ்மானுக்கு மிகவும் பிடித்த மேற்கத்திய இசை கலைஞர்கள் ஆவர்.ரஹ்மானின் இசையில் மேற்கூறிய சரித்திரங்களின் அகத்தூண்டுதல் காணப்படும்.இவ்வாறு மிக புதிய பாதையில் தனது பயணத்தை முன்னோக்கி தொடர்ந்தவண்ணம் இருந்தார்.சரியான வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.இவ்வாறு தனது இசைபயணத்தின் ஆரம்பதளங்களை சரியாக உருவாக்கொண்டிருந்த சமயம் 1991 ஆம் ஆண்டின் தமிழில் சிறந்தவிளம்பர ஜிங்கிள்’க்கான விருதை லியோ கொஃபி விளம்பரத்துக்காக ரஹ்மானின் பெயர் அறிவிக்கப்பட்டது.அந்த விளம்பரபடத்தை இயக்கியிருந்தவர் ரஹ்மானின் நண்பரும் பின்னாளில்  மின்சாரகனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற அழகான படங்களை இயக்கியவரும் சிறந்தஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் ஆவார்.
                                                            Leo coffee ad-Rahman

ராஜீவ் மேனனின் அழைப்பின் பேரில் அவ்விருதுவழங்கும் விழாவுக்கு மணிரத்னம் வந்திருந்தார் அவ்விருதை ரஹ்மானுக்கு மணிரத்னமே வழங்கி கெளரவித்தார்..இதுவே பின்னாளில் இந்திய சினிமாவையையே புரட்டிப்போட்ட ஒரு கூட்டணி அமையகாரணமான ரஹ்மான்&மணிரத்னம் இடையிலான முதல் சந்திப்பு ஆகும்.அந்த விழா முடிந்த பிற்பாடு அந்த 25 வயது இளைஞனை மணிரத்னத்தின் உறவுக்காரப்பெண் ஷாரதா த்ரிலோக் மணிரத்னத்திடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் சிறுகாலம் ஷாரதா த்ரிலோக் இன் த்ரிஷ் ப்ரோடக்சன்ஸில் பணியாற்றினார் ரஹ்மான்.
அந்த சமயம் இயக்குனர் மணிரத்னம் இயக்குனர் பாலச்சந்தரின் “கவிதாலயா” நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்துக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார்.மணிரத்னம்,பாலச்சந்தர் ஆகியோர் இதற்கு முன்னய படங்களுக்கு இசைஞானியையே பயன்படுத்தி பெருவெற்றி கண்டிருந்தனர். இருப்பினும் இசைஞானி இளையராஜாக்கும் மணிரத்னத்திற்கும் இடையே தளபதி படத்தின் பின்னர் பெரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தனர்.
இதேபோல புதுப்புது அர்த்தங்கள் படத்தின் பின்னர் பாலச்சந்தருக்கும் இசைஞானிக்கும் இடையே கருத்துவேறுபாடு முற்றி இருந்தது.
இதன் காரணமாக ரோஜா படத்துக்கு புதிய திறமையான ஒரு இசையமைப்பாளரை இசையமைக்கவைக்க திட்டமிருந்தார் மணிரத்னம்.

 மிகுதி அடுத்த பதிவில்.........