04/11/2012

ரஹ்மானின் புதிய கண்டுபிடிப்பு-ஷக்தி ஸ்ரீ கோபாலன்-நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கன்.

நேற்று இரவு வழமைபோல் பேஸ்புக்கில் முகம்புதைத்திருந்த போது நண்பன் ஒருவன் இப்பாடலை பகிர்ந்தான் .கேட்டவுடனே மயக்கிவிட்டது.இந்த மண்வாசனை சொட்டும் வரிகளையுடைய பாடலை அழகாக வித்யாசமா ஒரு பெண் ரஹ்மான் அருகிலிருந்து பாடிக்கொண்டு இருந்தாள்.


உடனடியாக கூகுலிலும் பேஸ்புக்கிலும் தேடினேன்.பேஸ்புக் ஐ.டீக்கு  ஒரு ரிக்குவஸ்ட போட்ட பின்(நாமெல்லாம் அப்பவே அப்பிடி) பின்னர் இதர தகவல்களைதேடினேன்.கிடைத்தவற்றையும் தெரிந்தவற்றையும் பகிர்கிறேன்.

"நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கன்" பாடல் சம்பந்தமான இன்றைய இரண்டாவது பதிவு இது.முதல் பதிவை காண....இப்பாடல் பற்றிய முதல் பதிவை படிக்க
கேரளாவை பிறப்பிடமாக கொண்டு தற்போது சென்னையில் வசித்துவரும் இளம்பாடகி.2008 ஆம் ஆண்டிலிருந்து பாடிவருகிறார். அண்ணா பல்கலைகழகத்தில் கட்டுமானம் படித்துவிட்டு ROCK BAND ஒன்றில் பாடிவருகிறார்.கிளாசிக்கல்,ஜாஸ்,ஃபங்,போன்ற இசையில்தேர்ச்சிபெற்றவர்.


இவர் தனது சொந்த இசையில் பாடல் எழுதி வெளியிட்டுள்ளார்.
2009 இல் சென்னை சங்கமம் விழாவுக்காக முதன்முதலில் போல் ஜோக்கப் இன் இசையில் ”காவேரி” எனும் அழகான பாடலை பாடியுள்ளார்.
இப்பாடல் மற்றும் இவரின் படைப்புகளை இங்கே கேட்கலாம்.
.இவரது ஆங்கில பாடல்கள் மற்று காவேரி என்னும் பாடல்களின் ஓடியோ வடிவம் இங்கே பெறலாம்




இவரின் குரலில் ஆரம்பத்தில் வெளிவந்த பாடல்


இவர்  ஏற்கனவே சில திரையிசை பாடல்கள் பாடியுள்ளார்.முதன் முதலாக போல் ஜேக்கப் இன் இசையில் "எலந்த பழம்" என்ற பாடல் ராஜாதிராஜா திரைப்படத்துக்காக ஈழத்து கலைஞர் தினேஷ் கனகரத்னதுடன் இணைந்து பாடியுள்ளார்.மேலும் அண்மையில் வெளிவந்த கொஞ்சம் காஃபி கொஞ்சம் காதல் படத்துக்காக “உயிர் உயிர் தோழா” பாடலையும் பாடியுள்ளார்.
திரைப்படத்தில் முதன் முதலில் பாடிய எலந்தபழம் மற்றும் உயிர் தோழா பாடல்களை கேட்க

இதன் பின்னர் விஜய் ஆண்டனியின் இசையில் நான் படத்துக்காக ஒரு அருமையான வாய்ப்பைபெற்றார் .”மாக்காயலா மாக்காயலா” பாடினார்.
இப் பாடல் அண்மைக்காலத்தில் மிகபிரபலமானது குறிப்பிடத்தக்கது.
இத்தகவலை பகிர்ந்த Dyena sathasakthynathan   அக்காவிற்கு நன்றி.

இவ்வாறு போய்கொண்டிருந்த இவரது இசைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பம் தான் ரஹ்மானின் அழைப்பு.ஷாருக் நடிப்பில் யாஷ் சோப்ராவின் JAB TAK HAI JAAN படத்துக்காக ஜாவிட் அலியுடன் சேர்ந்து  JAB TAK HAI JAAN என்னும்  அழகான மனதை பிழியும் பாடலை பாடினார்.தற்போது ஹிந்தியில் மிக பிரபலம் இப்பாடல் .
JAB TAK HAI JAAN பற்றிய முன்னய பதிவை வாசிக்க



இவரை பேஸ்புக்கில் பின் தொடர....

இப்பாடலின் வெற்றிக்கு பின் தற்போது தமிழ் இசை ரசிகர்கள் தற்போது கொண்டாடும் நெஞ்சுக்குள்ள பாடல் மூலம் அனைத்து இசை ரசிகர்களையும் மயக்கிவிட்டார் தன் குரலால்.ரஹ்மான் மூலம் வெளியுலகிற்கு வந்துள்ளார்.
ரஹ்மான் கண்டுபிடித்து பிரபலமாக்கிய முன்னணி பாடகர்கள் வரிசையில் ஷக்தி ஸ்ரீ கோபாலனும் இடம்பெறுவார்.எம் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு இரோஷன்.