06/12/2012

வைரமுத்து+ஜீ.வீ =பரதேசி பாடல்கள்


தமிழ் திரையுலகே மிக ஆவலுடன் எதிர்பார்துக்கொண்டிருக்கிறது பாலாவின் புதிய படைப்பான பரதேசி திரைப்படத்தை.இதுவரை பாலாவின் படங்களுக்கு இசைஞானியும்(சேது,பிதாமகன்,நான்கடவுள்) யுவனுமே(நந்தா,அவன் இவன்) இசையமைத்து வந்தனர்.இத்திரைப்படத்துக்கு அண்மைக்காலமாக கலக்கிவரும் ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பின் ஜீ.வி இசையமைக்கும் ஒரு மிகபெரிய படம் என்று இதை சொல்லலாம்.இதுவரை பாலா,இளையராஜா கூட்டணி மிக அருமையான பாடல்களை கொடுத்து இருந்தது.இறுதியாக நான் கடவுள் திரைப்படத்துக்கு இசைஞானியின் அபாரமான இசை வெகுவாக பேசப்பட்டது.
ஆனால்  இத்திரைப்படத்துக்கு ஒரு மாற்றத்துக்காக ஜீ.வீ தெரிவுசெய்துள்ளார். வசந்தபாலன் மூலம் வெயில் படத்தில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்தில் 25 படங்களுக்கு இசையமைத்திருந்த ஜீ.வீ இன் 26வது படம் இது பாடல்கள் அனைத்தையும் பாலாவுக்கு முதல் முறையாக வைரமுத்து எழுதியுள்ளார்.
பரதேசி பாடல்கள் என் பார்வையில் எப்படி வந்துள்ளன என்பதை எனக்கு பிடித்தபாடல் வரிசையில் தருகிறேன்.


1.”
ஓர் மிருகம்

பாடிவர்கள்-பிரசன்னா&பிரகதி

இப்பாடலே இந்த ஆல்பத்திலே எனக்கு மிகவும் பிடித்தது. சோகம் இழையோடும்  அழகான பாடல்.சூப்பர் சிங்கர் பிரகதிக்கு ஒரு அட்டகாசமான  அறிமுகப்பாடல் இது.ஆரம்ப ஆலாபனையாக இருக்கட்டும்யாத்தே காலக்கூத்தேஎன்று பாட ஆரம்பிக்கும் போது சரி  .”எங்கோ தவிக்கும் என் பிள்ளையேஎன்ற வரிகளை பாடும் போது சரி பிரகதி ஒரு முதிர்ச்சி அடைந்த பாடகி போல தெரிகிறார்.நான் அதிகம் ரசிக்கும் பாடகர்களில் ஒருவர் பிரசன்னா.ஆனால் அதிக பாடல்கள் பாடுவதில்லை.இருப்பினும் இப்பாடலில் பிரசன்னா பாடும் இடங்கள் சொல்லவார்த்தை இல்லை.ஒரு வலியை பாடல்மூலம் உணர்வாக கொடுக்கிறார்.
பாடலுக்கு இடையில் வரும் இரண்டு  INTERLUDE’S அற்புதம்.இப்பாடலை கேட்கும் போது படத்தின் காட்சி  எப்படி இருக்கும் என்று யூகிக்ககூடியதாக உள்ளது.ஒரு பாலா படத்துக்கான பாடல் எப்படி இருக்கவேண்டுமோ அதிலிருந்து சற்றும் பிசகாமல் வந்திருக்கிறது இப்பாடல். இப்பாடலை  ஜீ.வீ இன் இசையை விட வைரமுத்துவின் வரிகள் தான் உச்சத்துக்கு கொண்டு செல்கின்றனஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை தன் அடிமை செய்வதுமில்லை.ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால் அது மனிதன் செய்யும் வேலை”“வழி சொல்லவே இல்லையே வாய் மொழி கண்ணீரு தான் ஏழையின் தாய் மொழிபோன்ற வரிகள் அற்புதம்.ஆனால் இந்தப்பாடலின் மெலோடியை தூக்கிவிட்டுபெம்மானேபாடலின் மெலோடியை பிரதியிட்டு பாருங்கள்.பின்னணி இசைக்கு அப்படியே பொருந்தும்.

2.”தன்னைத்தானே

பாடியவர்-கானா பாலா

நடுக்கடலில கப்பல எறங்கி தள்ளமுடியுமாஎன்ற ஒரு அருமையான தத்துவபாடலை பாடி இளைஞர்களின் பெரும் ஆதரவைபெற்ற கானா பாலா இப்பாடலை பாடியுள்ளார்.இவர் இப்பாடல் ஒரு கிறீஸ்தவ கானா பாடல் வகையில் அமைந்துள்ளது.கானா பாலா திரை இசைக்கு வருவதற்கு முன்னர் கிறீஸ்தவ பாடல்கள் பல பாடிவெளியிட்டது குறிப்பிடவேண்டியது.
கானா பால பாடிய “பரலோகம்” என்ற கிறீஸ்தவ பாடலை கேட்க......
நல்ல ஒரு பாடகர் தெரிவு.நிச்சயமாக அனைவரையும் ஆடவைக்கும் இப்பாடல்.”ஆலேலூயா ஆலேலூயாஎன்ற கோரஸில் கானா பாலாவின் குரலின் நெகிழ்வு அருமை.மிக அனுபவித்து பாடியுள்ளார்.நீர் பறவை பாடல்களுக்கு பின்  வைரமுத்து எழுதிய கிறீஸ்தவ சமயத்துடன் சார்ந்த இன்னொரு பாடல்.


3.“அவத்த பையா

பாடியவர்கள்-வந்தனா சிறீனிவாசன்,யாஷின்

இந்த ஆல்பத்ல இருக்கிற ஒரேயொரு காதல் பாடல். ஜீ.வீ இன் இசையில் வந்தனா பாடும் இரண்டாவது பாடல் இது.இவர் ஏற்கனவேஒரு பாதி கதவுஎன்ற அழகான மெலோடி பாடலை பாடியிருந்தார்.கிராமிய மணம் சொட்டும் ஒரு அழகான மெலோடி. புல்லாங்குழல்,வீணை போன்ற இசைகருவிகளின் சேர்க்கை அருமை.ஆண் குரல் யாசின் என்ற பாடகர் பாடியுள்ளார்.இருப்பினும் அவரது குரலில் ஜீ.வீ இன் பாதிப்பு தெரிகிறதுஇப்பாடலிலும் வைரமுத்து தனது காதல் மொழியை எழுதியுள்ளார்.பாடல் வரிகளில் கிராமத்து வார்த்தைகள் அழகாக கையாண்டுள்ளார்.சர சர சாரக்காத்து பாடலுக்கு பின்னர் வைரமுத்துவின் இன்னொரு கிராமத்து காதல் பாடல் எனலாம்.
                                 

4.” செங்காடே

பாடியவர்கள்-மதுபாலகிருஷ்ணன்,பிரகதி

செங்காடே சிறு கரடே போய்வரவாஎன்று தனது காந்தகுரலால் மதுபாலகிருஷ்ணன் பாடும் போதே பாடலின் போக்கு புரிந்துவிடும்.பாடல் வரிகளில் அத்துணை வலிகளும் உணர்வுகளும் கோர்க்கப்பட்டுள்ளது. இப்பாடலிலும் வைரமுத்துவே தெரிகிறார்.வழமையாக பாலா படங்களில் வரும் இருட்டு வாழ்க்கை வாழும் மக்களின் நிலையை எடுத்தியம்பும் ஒரு பாடல். “கங்காணி பேச்சை நம்பி சனம் போகுதே நண்டுகள் கூட்டிகொண்டு நரி போகுதேபோன்ற வரிகள் இப்பாடலின் இன்னொரு பரிமாணம்.இந்த ஆல்பத்திலே மிக அற்புதமான வரிகள் அமைந்த பாடல் இது.


5.“செந்நீர் தானா

பாடியவர்-’கங்கை அமரன்”,ப்ரியா ஹிமேஷ்

பாலா படத்தில் வரும் அந்த இளையராஜா எஃபக்ட் இப்பாடல். ”பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடலின் அகத்தூண்டுதல் எனவும் சொல்லலாம்.இசைஞானி இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கங்கை அமரனை வைத்து இப்பாடலை பாடவைத்துள்ளனர்.ஒவ்வொரு வரிகளும் முதலாளித்துவ வர்க்கத்தால் வெயில்மழை என்று பாராது உழைக்கும் ஏழைகள் படும் துன்பத்தை பாடலாக்கியுள்ளார் வைரமுத்து.




மொத்தத்தில் ஜீ.வீ பிரகாஷின் திரை இசை வரலாற்றிலே மதராசபட்டணம் பாடல்களுக்கு அடுத்ததாக நான் அதிகம் ரசித்தது பரதேசி பாடல்களையே ஆகும்.மேலும் இதுவரை ஜீ.வீ இசையில் வந்த பாடல்களில் அதிகம் உணர்வுகளை கோர்த்த பாடல்கள் இவை.இவற்றை விட வைரமுத்துவின் அனுபவ வரிகள் பாடல்களை எங்கோ கொண்டு போய் சேர்க்கிறது.பாடல் வரிகள் படத்தோடு மிக ஒன்றியவையாக இருக்கின்றன.பாலா இதுவரைகாலமும் இசைஞானி கூட்டணியில் இயங்கியமையால் வைரமுத்துவுடன் கைகோர்க்க முடியவில்லை. இப்படத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது.
பாடல்களை கேட்கும் போது வைரமுத்துவிற்காகவே ஜீ.வி.பிரகாஷ் இப்படத்துக்கு தெரிவுசெய்யப்பட்டு இருக்கலாம்.வழக்கமாக பால படங்களின் ஓடியொவில் 5,6 பாடல்கள்வரும் ஆனால் படத்தில் ஒரு சில பாடல்களே தேவைக்கேற்ப பயன்படுத்தபடும். ஆனால் இத்திரைப்படத்தில் காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னரே பாடலுக்கு இசையமைத்துள்ளார் ஜீ.வீ. இது பாலா போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு ஆரோக்கியமான ஒரு நடவடிக்கை ஆகும்.படத்தோடு பார்க்கும் போது பாடல்கள் இன்னும் உயிருள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இதுவரை பாலா படங்களில் பணியாற்றிய நடிகர்களிலிருந்து தொழிநுட்பக்கலைஞர்கள் வரை தேசியவிருதுகளை வாங்கி குவித்திருக்கின்றனர்.ஆனால் பாலாவின் படங்களுக்கு  இசையமைப்புக்கோ பாடல் வரிகளுக்கோ தேசியவிருது கிடைக்கவில்லை.இப்பாடல்கள் மூலம் அது நிறைவேறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!!!!

இவன் இரோஷன்.